நீ உணர்வாய்
முள்ளாய் இருந்து பார் அதன் அழுத்தத்தை நீ உணர்வாய்
நிழலாய் இருந்து பார் அதன் வேகத்தை நீ உணர்வாய்
மலராய் இருந்து பார் அதன் வருத்தத்தை நீ உணர்வாய்
புத்தகமாய் இருந்து பார் அதன் கருத்தை நீ உணர்வாய்
மருந்தாய் இருந்து பார் அதன் மகத்துவத்தை நீ உணர்வாய்
கவிதையாய் இருந்து பார் அதன் கவித்துவத்தை நீ உணர்வாய்
பிம்பமாய் இருந்து பார் அதன் எண்ணத்தை நீ உணர்வாய்
கனியாய் இருந்து பார் அதன் உள்ளத்தை நீ உணர்வாய்
கண்ணியமாய் இருந்து பார் அதன் மாற்றத்தை நீ உணர்வாய்
காற்றாய் இருந்து பார் அதன் தோற்றத்தை நீ உணர்வாய்
உயிராய் இருந்து பார் அதன் ஆழத்தை நீ உணர்வாய்
வெளிச்சமாய் இருந்து பார் அதன் மார்க்கத்தை நீ உணர்வாய்
மனிதனாய் இருந்து பார் வாழ்வின் தத்துவத்தை நீ உணர்வாய்

No comments:
Post a Comment