மனமார்ந்த மணவாளனுக்கு என் கவிதை மடல்
மணநாளன்று கரம் பிடித்து மணையாளி ஆக்கினாய்
மங்கையின் பூரணம் தாய்மை எனும் அங்கீகாரம் கொடுத்தாய்
மனக்கசப்பை விரட்டி சரி பாதி இடம் அளித்தாய்
மனம் உவந்து நான் படிக்க உறுதுணையாய் நின்றாய்
மன திருப்தி இல்லாத சமயத்தில் அன்பால் ஆறுதல் சொன்னாய்
மத்தாப்பு புன்னகை பூத்து என் உறவுகளிடம் ஐக்கியமானாய்
மந்தாரை பூ நிறத்தில் சேலை கட்டியதை ரசித்து படம் பிடித்தாய்
மல்லிகை பூ சூடி விட்டு தினம் பூச்சூட்டல் விழா செய்தாய்
மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இலக்கணம் கொண்டாய்
மழுங்கிய என் சிந்தனையை தூண்டும் கருவியாக இருந்தாய்
மற்ற நாட்களையும் இப்படியே கழித்து விட எனக்கு ஆசை

No comments:
Post a Comment