ரயில் பயணங்களில்
காணும் காட்சிகளில் ரசித்தது பல
கருத்தினால் மாறுபடும் வார்த்தைகள் பல
விழி இல்லாதோர் பாடும் பாடல்கள் பல
மழலைகளின் அழுகுரல் கூச்சலும் பல
இணை பிரியா தொடரும் பெட்டியில்
மாறும் மனிதர்களின்
மத்தியில்
தொடர்ந்த வாழ்வுகள் பல.
மலர்ந்த நினைவுகள் பல
கிடைத்த அனுபவங்கள் பல
விபத்துக்களில் சிதறிய உயிர்கள் பல
ஆரம்பித்த சினேகங்கள் பல
முடிந்த சோகங்கள் பல

No comments:
Post a Comment