கிடையாது
தவிக்கும் உள்ளத்திற்கு ஆறுதல் கிடையாது
தாங்கும் தாய்க்கு வெகுமதி கிடையாது
திருந்திய வாழ்விற்கு அங்கீகாரம் கிடையாது
தீரன் வாழ்வில் அமைதி கிடையாது
துடிக்கும் நெஞ்சங்களுக்கு பின்னடைவு கிடையாது
தூங்கும் மனிதனுக்கு வாழ்வு கிடையாது
தெளிந்த நீரோடைக்கு மாசு கிடையாது
தேடுதலுக்கு முற்றுப்புள்ளி கிடையாது
தைரியம் சொல்ல தோல்வி கிடையாது
தொண்டனுக்கு விடியல் கிடையாது
தோற்பதில் மட்டுமே துன்பம் கிடையாது

No comments:
Post a Comment