நாக்கில் பட்டவுடன் சுர் என்றது
உணர்ச்சிமிக்க நாக்கு சுரணையற்றது
நொடி பொழுதில் உன்னை பருகியுடன்
ஒவ்வொரு முறை நினைத்தாலும்
உனை கண்ட உற்சாகத்தில்
தன்நிலை மறந்து நாக்கை சுட்டதே
மிச்சம்
அவசரம் சில சமயங்களில் அது
அவசியமா
அவ்வளவு நேரம் இல்லாத பசி
எங்கிருந்து வந்தது ஹோட்டலில்
காத்திருக்கும் போது
அவ்வளவு நேரம் வீணாக்கிவிட்டு
கடைசி வினாடியில் வரும் அவசரம்
தலைக்கு மேல்தினமும் காலையில்
உணவு உண்ணும் போது
அவசரத்தில் கொட்டிய வார்த்தை,
தண்ணீர்..
அவசியமான அவசரத்தை தவிர
சிலபலநேரத்தில் அவசரத்தை துறந்து
அவசியமான பொறுமையை அணிவோமா
குறிப்பாக சூப் குடிக்கும் போது..

இளஞ்சூடான சூப்பின் மனமும் காரணமாக இருக்கலாம். அவசரமும் அவசியமே நாம் வைத்த ரசத்தை அடுத்தவர் சுவைக்கும் முன் நாம்சுவைத்து ரசிக்க. அழகு வித்யா.
ReplyDeleteஉண்மை நன்றி வீணா
ReplyDelete