புரட்டி பார்த்து படித்தது போதும்
படித்தவை கொண்ட பின் புத்தகமும்
மனிதனாய் மாறியதோ?
ஏட்டை என் கரங்கள் கொண்டு தாங்கினேன்
அதுவும்
மனிதனாய் மாறிப் போய் என் உடலாய் மாறியதே
காகிதப் போர் வீரர்கள் நிற்க
படைத்தவன் அங்கே அமைதியாய் தாங்க
அடுத்த வீரர் யார் என்ற சிந்தனையில் உருவாக்கும் குருக்காக காத்திருந்த காகித தாள்கள்
கற்ற கலையில் நின்ற கலை பொம்மைகள்
எழுத்தாளனின் கைவண்ணம் ஏட்டினிலே
கலைஞனின் கை வண்ணம் ஏடுனிலே

No comments:
Post a Comment