ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் கைப்பிடியில்
அதை எதிர்த்து வருவதும்
வேண்டாம் என்று விலகி நிற்பதும்
அவரவர் மனநிலை பொறுத்து
கை விரல்கள் மடிந்த பின்னும்
ஓய்வு தேவையில்லை
சிரசை தூக்கி விரசாய் நடக்க பாரும் நம்மை திரும்பி பார்க்கும்
(கால்) நடையும் (சொல்) நடையும்
அவசியம் பாரை வசமாக்க
ஏதும் சொல்லாமல் மனம் , சிரம் அமைதி காத்தால்
விரல்களும் பலம் இழக்கும்
கை ரேகைகளும் படிந்தது நெருக்கமாய்
அவன் காதல் போலே
உன்னில் என்னை புதைத்தேனா?
விளங்கவில்லை எனக்கு
உன்னில் புதைந்திருந்தால்
வீரம் கொண்டிருப்பேன்
மமதை கொண்டிருப்பேன்
உன்னில் நான் அடக்கமானதும்
உந்தன் வெற்றியோ?

No comments:
Post a Comment