வசிப்பதும் ஒன்றே
நேசிப்பதும் ஒன்றே
சுவாசிப்பதும் ஒன்றே
வாசிப்பதும் ஒன்றே
யாசிப்பதும் ஒன்றே
யோசிப்பதும் ஒன்றே
புசிப்பதும் ஒன்றே
பூசிப்பதும் ஒன்றே
ரசிப்பதும் ஒன்றே
ருசிப்பதும் ஒன்றே
சகிப்பதும் ஒன்றே
சலிப்பதும் ஒன்றே
தரிசிப்பதும் ஒன்றே
எனில் எங்களுள் ஏன்
வெவ்வேறு உருவம் கொடுத்தாய்?
இறைவா!
உன் உருவம் பலவாகிலும்
நீயும் ஒன்றே என்று
உணர்த்தும் போது
நாங்களும் ஒன்றுபட்டோம் தன்னிறைவோடு

No comments:
Post a Comment