Friday, March 1, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


வசிப்பதும் ஒன்றே

நேசிப்பதும் ஒன்றே

சுவாசிப்பதும் ஒன்றே

வாசிப்பதும் ஒன்றே

யாசிப்பதும் ஒன்றே

யோசிப்பதும் ஒன்றே 

புசிப்பதும் ஒன்றே

பூசிப்பதும் ஒன்றே

ரசிப்பதும் ஒன்றே

ருசிப்பதும் ஒன்றே

சகிப்பதும் ஒன்றே

சலிப்பதும் ஒன்றே

தரிசிப்பதும் ஒன்றே


எனில் எங்களுள் ஏன்

வெவ்வேறு உருவம் கொடுத்தாய்? 

இறைவா! 

உன் உருவம் பலவாகிலும்

நீயும் ஒன்றே என்று

உணர்த்தும் போது

நாங்களும் ஒன்றுபட்டோம் தன்னிறைவோடு

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...