ஒரு பொருள் இரு முறை குரல் எழுப்பி சிந்தனையை ஈர்த்தது.ஆனால் அதனால் பேச முடியாது!
ஒன்று காலையில் விழித்த நிலையில்,
சாலையில் நடைபயிற்சியின் போது சரக்க சரக்க என்ற ஒலி கூப்பிட்டது.ஒரு சிறு துண்டு குரல் எழுப்பி உருண்டோடியது.
இரண்டு இரவில் உறக்கத்தில்,
மின்விசிறி அனுப்பிய காற்றில் திரைசீலைகள் மெல்ல அசைந்து எழுப்பிய அலையில் ஆடி ,பாடிய காற்றுக் கிண்கிணி ஒருபக்கம் இருக்க.மேஜை மேல் இருந்து படபடவென குரல் எழுப்பி கவனத்தை ஈர்த்தான்.
யார் அவன்?

No comments:
Post a Comment