மாடி தொட்டியில் அடைபட்ட நான் பருவம் அடைந்து விட்டேன். எனை தோட்டம் என்னும் பள்ளியில் சேர்த்து விட்டால் எனக்கும் பல நண்பர்கள் கிடைப்பார்கள். ஒருவேளை நீங்கள் தினமும் தண்ணீர் ஊற்ற மறந்தாலும் தொட்டியில் இருப்பதை போல் நான் வாடி விடமாட்டேன். நண்பர்களுக்குள் நாங்கள் நிலத்து நீரை பகிர்ந்து கொள்வோம். மனிதர்களை போல அல்ல நாங்கள், அவனின் தொலை நோக்கு சிந்தனையில் ஏற்பட்ட அடைப்பால் ஒரு பக்கம் வளர்ச்சி மறு பக்கம் வறட்சி . எங்களிடம் கேளுங்கள் என்றும் சிரித்தும், மலர்ந்தும் இருப்பது எப்படி என்று நாங்கள் உங்களுக்கு கற்பிக்கிறோம்.
இப்படிக்கு உங்கள் மாடி வீட்டு மகாராணி, தோட்டத்து இளவரசி

No comments:
Post a Comment