வெட்டு பட்டு போன என் வாழ்வு மீண்டும் துளிர்க்குது உன் கருணை மழையால்
மரக்கடைக்கு போகும் முன்னே துளிர் விட்டதால்
மரம் கொண்டது வெற்றி இன்னும் சில வருடங்கள் உயிர் வாழ
பெண் மட்டுமே புதிரல்ல
இந்த மரமும் தான்
கடினமான பாதையில்
பயணித்தாலும்
காதல் உண்டு
புறத்தோற்றம் பெரிதல்ல
அகமே சிறப்பு
நிலத்தின் ஈரம் மரத்தில் ஏறியது
மரத்தின் ஈரத்தால்
இலையும் துளிர்விட்டது
இலையும் துளிர் விட்டதால் பசுமை கொண்டது
பசுமை பூத்ததால் கிளைகள் விரிந்தது
கிளைகள் விரிய நிழல் தந்தது
நிழல் மட்டுமல்ல காய், கனி ஈன்றது
காய் , கனி உண்டு நிலத்தில் இளைப்பாறி அதை வெட்ட உத்தரவு இட்ட
மனித மனத்தின் ஈரம்
எங்கே சென்றது?

No comments:
Post a Comment