துளி துளி மழைத்துளி
சொட்ட சொட்ட நனைந்த கொடியும் செடியும்
தூரத்தில் ஆடும் மரமும் மேகமும்
பல நாள் கழித்து குளித்த வீட்டின் ஓடும் சுவரும்
எங்கும் நிறைய மழை நீர்
குளிர்ந்த மண்ணும் மண்வாசனையும்..
மழைநீர் குடித்த கொடியே தளதளவென படர
பூத்துக்குலுங்க காத்திருக்கும் செடியும்
சுவரின் ஒரத்தில் படர்ந்த பாசியின் படலம் கண்ணாடி போல் வழுக்க
பார்த்து நடப்போம் சாலையில் மழை சாரலில்..

தொடரட்டும் தாங்கள் கவி பயணம்
ReplyDeleteநன்று
மிக்க நன்றி😊
ReplyDelete