பெண் சிலையாய் நின்றாலும் துன்பப்படுத்தும் மனிதர்கள் இருக்கும் போது இந்த பெண்ணுக்கும் முள்ளாக மாறி துன்பபடுத்தும் இயற்கை
சிலையானாலும் ஓவியக்கலையானாலும் பெண் என்பவள் தூண்டில் வலையில் சிக்காத மீன்
சேலையும் அதை தாங்கி நிற்கும் சிலையும்
குடமும் அதை ஏந்தி செல்லும் கரமும்
அலையாய் கூந்தலும் அது தவழ்ந்து வரும் இடமும்
தெருவில் நடந்தாலும் அங்கே பதியும் கால் தடமும்
வெண் தோற்றமும் அதில் காணும்
செருக்கு கொண்ட முகமும்
தீண்டிய முள்ளும் அதை கைப்பற்ற நினைக்கும் விரல்களும்
மறைத்த உடையும் அது மறைக்காத இடையும்
வளர்ந்த மேனியும் அதில் மிளிரும்
வாழை தண்டு கழுத்தும்
பார்ப்பதில் சுகமும் சுகந்தமும் அது அறியாத மனமும்
தவிர்க்கும் பெண்ணும் தடுமாறும் ஆண்களும்
தடம் மாறவும் வாய்ப்புண்டு பெண்ணே! உன் அழகை உன்னுள்ளே பூட்டி வைத்துக்கொள்

பெண்ணை பெண் ரசித்து எழுதிய கவிதை --கவிதை நன்று
ReplyDeleteநன்றி
Delete