உன்னில் நானாக
நீ அணியும் செருப்பாக மாறவும் நான் தயார், தேய்ந்த பின்னும் நீ என்னை தூக்கி எறியாமல் இருந்தால்
உன் கால் கொலுசாகவும் இருக்க நான் தயார், என் பளப்பளப்பு குறைந்த பின்னும் நீ என்னை கழட்டாமல் இருந்தால்
உன் கை வளையலாக இருக்க நான் தயார், புது வரவு வந்தாலும் நீ என்னை மாற்றாமல் இருந்தால்
உன் கழுத்து மாலையாகவும் இருக்க நான் தயார், என் மினுமினுப்பு மங்கினாலும் நீ என்னை மறுக்காமல் இருந்தால்
உன் உடலை மறைக்கும் ஆடையாகவும் இருக்க நான் தயார், அடித்து துவைத்து நீ என்னை கிழிக்காமல் இருந்தால்
உன் விரல் மோதிரமாகவும் மாற நான் தயார், நான் நசுங்கி போனாலும் நீ என்னை வெறுக்காமல் இருந்தால்

நன்று
ReplyDeletenandri
Delete