அளவிற்கு மிஞ்சினால் அமுதும்
விஷமாக மாறும் என்பர்
அது அன்பிற்கு இல்லையேல்
கொடுக்க கொடுக்க
ஒரு நிலையில் பெறுபவர்
பிறருக்கு கொடுக்க
வளர்ந்து செல்லும்
என்றும் குறையா செல்வம்
படிக்க படிக்க அறிவு பெருகும்
அது படிக்கும் புத்தகத்தை பொருத்து
பழக பழக மனம் பக்குவமாகும்
அதுவும் பழகுபவரை பொருத்தே
நடக்க நடக்க கால்கள் ஓய
பயணம் கனவிலே நீள
பறக்க பறக்க மனம் மேலே பாயும்
கடல் அலைகள் ஓயும் ஓயாது கவலைகள்
சிரிக்க சிந்திக்க வயிறும் மனமும் வலிக்க
மூட மூட பொங்கி வழியும் கோபமும்
அதை காற்றில் கலக்க மறைந்து
போனால் என்ன அடர்ந்த காட்டில்
விளையாடும் அணில் போல் மரம் விட்டு மரம் தாவுதே மனம்
காட்டிலும் அன்பிலும் சிக்கி கொண்டால் வழி தெரியாது
அவை விடும் வரை

அழகான எழுத்து வடிவம். படிக்க படிக்க ஆனந்தாம் பெருகுகிறது
ReplyDeleteநன்றி வீணா😊
ReplyDelete