தேடி தேடி கிடைக்கும் சுகம்
தேடாமல் வருவதில் கிடைக்குமா
நாடி நாடி வரும் சொந்தம்
நாடாமல் வரும் நட்பு
வாடி வாடி போன முகம்
வாடாமல் மலர்ந்ததென்ன
பாடி பாடி வரும் இன்பம்
பாடாமல் வரும் துன்பம்
ஆடி ஆடி ஓய்ந்த கால்கள்
ஆடாமல் நிக்குமா
தேடி நாடி வாடி பாடி ஆடி நின்றேன்!

கோடி கோடி கொடுத்தாலும் கிடைக்காத சுகம் ஒன்றே நம்மை மெய் மறந்து ரசிக்க வைப்பதும் . அருமையான எதுகை வரிகள் வித்யா
ReplyDeleteஉண்மை நன்றி வீணா
ReplyDelete