Friday, February 17, 2023

உறவாடிய உரையாடல் எங்கே by Vidhya Nivash



உணர்வை பரிமாறி கொள்ள 
வார்த்தைகளும், நேரமும் ,மனமும் 
போதுமே எழுத்தை விட சிறந்த ஆயுதம் உண்டோ...
எப்பேர்பட்ட மனதையும் துளைக்க
 
குரலை விட வலிமையான ஈட்டி உண்டோ...
எப்பேர்பட்ட மூளையையும் எட்ட

இதற்கு ஊடகமாக காகிதமும்,
தொலைபேசியும் எழுத்துக்கும் 
குரலுக்கும் உயிர்க்கொடுத்து மனதோடு உரையாட தொலைத்த ஒவ்வொரு நொடியும் சுகமே...

 அந்த உணர்ச்சிகள் பட்டாம்பூச்சி 

பறக்கும் துடிப்பு அதை விளக்கமுடியா ..

குரலோடு உறவாடிய மனது உருவை 

ஏற்க தயங்கும் மூளைக்கு 

எட்டியது மனதிற்கு ஏன் தயக்கம்..

உருவமற்று உயிரோடு உறவாடியவை 

உருப்பெற்று முன் வந்து உரையாட 

நேரமில்லை மனமில்லை 

வார்த்தையும் இல்லையே..

 

2 comments:

  1. அருமை. சொல்லும் எழுத்தும் சிறந்த ஆயுதமேயானலும் பல நேரங்களில் மௌனம் விடையே

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...