Wednesday, January 31, 2024

குமிழி தூது by Vidhya Nivash

 


வண்ண வண்ண குமிழிகளே வட்ட வட்ட குமிழிகளே மெல்ல மெல்ல செல்லுங்களே. காற்றில் மெல்ல மிதந்து தூது சென்று பொய் கோபத்தில் முகத்தை திருப்பும் என் நண்பனிடம் சொல்லுங்க . அவனில்லாமல் எனக்கும் எதுவும் ஓடவில்லை என்று.அவனின் நினைவே குமிழியாக மிதக்கிறது என்று.காற்றில் அது வெடிப்பது போல் நாமும் நம் பொய் கோபத்தை விடுவோமே. என்னை விட்டு சாப்பிட்ட முருக்கை இரண்டாக தர சொல்லுங்க .

படமும் கருத்தும் by Veena Shankar

 


 அவனின் இதயம் அவளிடம் என்பதால் அது அவளுடைய இதயமாக கூட இருக்கலாம்😉


 சத்தமில்லாமல் ஓர் இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தேறியது


 கொண்டு செல்வது யாருடைய இதயம் அது?

அவனுடையதா? அவளுடையதா?

தவிப்பில் நாம்


 பிளவுபட்ட மனதில் ரணமாக்கிய இதயம் வேறொரு இடத்தில் பொருந்துமா?

படமும் கருத்தும் by Veena Shankar

 


காற்றோடு நான் இயற்கையை ரசிக்க

 காற்றுக் குமிழி மட்டுமே

 துணையானது இரவிலும் கூட


அதிசயம்!

அலைபேசி அழைக்காத காலம்


இயற்கையோடு இணைந்த ராகம்


விளையாட்டை விடையாக்கும் வசந்தம்


எல்லை எழுதப்படாத வாழ்வு


குறிக்கோலும் குறையாத வெற்றி


அந்நாளில் கொண்ட மகிழ்ச்சி இந்நாளில் மலர தவிப்பதேன்


 துள்ளி திரியும் காலத்தில் துயிலத்தான் முடியுமோ?


அள்ளி அணைக்கும் பருவத்தில் அகலத்தான் முடியுமோ?


சொல்லி கேட்ட பாடத்தில் காதல் கொள்ளத்தான் முடியுமோ?


பள்ளி கொண்டாலும் நியாயமான கனவும் காணத் தான் முடியுமோ?


கிள்ளி கொண்டு எனை உணர்ந்தாலும் நிஜமும் நிழலாக்க தான் முடியுமோ?

Tuesday, January 30, 2024

கண்ணம்மா ஜோதி by Vidhya Nivash

 


பறை பறை உலகெங்கும் உரக்க பறை எவ்வுயிரும் எந்த விதத்திலும் ஊனம் இல்லை .அதன் கூட்டை உடைத்து பறக்க, உலகை வலம் வர. தைரியம், முயற்சி என்ற ஆயுதம் போதும் என்று உலகிற்கு பறைசாற்றும் இந்த தேவதையின் அற்புதமான திறமைகளை கண்டு மெய்சிலிர்க்க கண் கலங்காதவரே இல்லை நேற்றைய அரங்கிலே. 

இவளின் மறு உருவாக அன்னை என்னும் தெய்வம் எடுத்த முயற்சியை காணும் போது நம் வலிகள் வெறும் தூசே.எதுவும் இல்லாமல் ஒருவரால் சாதிக்க முடியும் போது பல ஆசிர்வாதத்தை பெற்ற நாம் சிந்திக்கும் வேளை இது.எது நம்மை தடுக்கிறது.

இவர்கள் கேட்பது இரக்கம் இல்லை அங்கீகாரம்.எங்கே புறக்கணிக்க பட்டோமோ அங்கே தன் திறமைகளை அதுவும் பல்திறமைகளை பறைசாற்ற  துடிக்கும்,அயராது உழைக்கும் தேனீக்கள். 

அதே அரங்கில் அபிஷேக்கின் பாடலை கேட்டவுடனே.அனைவரின் கண்களும் கலங்கின.அந்த தாய் மகனின் உறவை,அவரின் முயற்சியை பார்க்கும் போது சொல்லாமல் சொன்ன பாடங்கள் பல.

இந்த குழந்தைகளின் உலகமே அவர்களுடைய பெற்றோர்களே.  இவர்களை பார்க்கும் போது அவர்கள் கேட்கும் அந்த அங்கீகாரத்தை முடிந்த வரை ,ஒரு கைகுலுக்கள் இல்லை ஒரு புன்னகையை நம்பிக்கையாக கொடுக்கலாமே.அடுத்த தலைமுறைக்கும் பழக்கலாமே.

ஜோதி கண்ணமாவின் பறை கண்மூடிகிடந்த மனதின் அறையை திறந்தது.




Monday, January 29, 2024

இலையில் கலை by Veena Shankar

 


காலையில் எழுந்தவுடன் இந்த கலை


மாலை வரை என்னில் மலை போல் இருக்க


வாலை சுருட்டிக் கொண்டு இவ்வலையில் சிக்க


சீலை பிடித்து செல்லும் நான் 

சிலையென நிற்க


தோலை காத்தபடி நான் தொலைவில் இருந்தபடி பார்க்க


கடவுளும் தோன்றினார் கண் முன்னே இலையின் கலையில்


 கலைக்கு இலை பொருட்டல்ல

அதில் உருவாக்கும்

வடிவமே சாட்சி


 கலையில் இத்தனை கோணங்களா?


வட்டம், அரைவட்டம்,

அதன் விட்டம், ஆரம்

அது கொண்ட

கோணம், கணம்

திரட்டி உருட்டிய

உருளை, கூம்பு

என பலவும்


 இணைந்த கோடுகள்

மற்றும் வளைவுகள்


நெகிழவும் செய்ததே 

என் உள்ளத்தை

கண்டபோது

அதன் கலை நுணுக்கம்

அறிந்த போது 


பெற்ற வடிவமும்

அவை ஒவ்வொன்றும்

தாங்கி நிற்கும் 

நேர்த்தியும்


கலைஞனின் கைவண்ணமும்

அவனை உருவாக்கியவனும்


அவனால் உருப்பெற்ற யாவும் 

இவனாலே!


வண்ணமே தேவையில்லை, 

காணும் பொருள்

பரம்பொருள் என்பதால்


சான்றிதழும் அவசியப்படவில்லை

உருப்பெற்றது

தோற்றுவித்தவனின் 

சிஷ்யன் என்பதால்

களிப்பு by Vidhya Nivash


 

 

கீழே சிந்தும் பருக்கையை  உண்ண காத்திருந்தேன். கிடைத்தது பெரிய துண்டு. வா பங்கு போட்டு உண்ணலாம்.மிதமிஞ்சி இவர்கள் உண்டு கழிக்கும் களிப்பில்,நமக்கும் பங்கு உண்டு.ஆனால் சூரியன் மறைந்தவுடன் கொட்டிக் கொடுத்தாலும் நமக்கு வேண்டாம்.

Sunday, January 28, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



நிலவு பக்கம் என்பதை அம்மா சோறு ஊட்டி பாடம் சொல்ல, அவளை நிலவுக்கு அழைத்து செல்ல பாதை காட்டியது இன்று வளர்ந்த குழந்தை


பூமியில் மனிதன் விளையாட

வானில் மேகங்களின் விளையாட்டு ஆரம்பம் நிலவை சாட்சியாய் கொண்டு


ஐவகை நிலங்களையும் கொண்டு சேர்ப்பான் ஓவியன் தன் தூரிகையால்


ஐம்பொன் அணிகலன்களும் அடைக்கலமாகும் தாரகையால்


ஐவிரல்களும் வயலில் பதிய அவை பொன்னாகும் கலப்பையால்


வடிகின்ற வியர்வையும் முந்தானையில் துடைக்கின்ற துணையால் வடியும் இருந்த மனம் களைப்பால்

Friday, January 26, 2024

உழவர் by Veena Shankar

 




கலப்பை பிடித்து களத்தில்

 இறங்கினால் மட்டுமே

வளம் காண முடியுமே 

அவன் தன் வாழ்வில்


உழவு என்பது

உழுவதில் மட்டுமே

முடிவதில்லை

விளைவித்ததை

வினையில்லாமல் விலையாக்கும் வரை

உண்டு என்றும் அவனுக்கு


உழுவ இயந்திரம் கொண்டாலும்

அதை இயக்க தெரிந்தவனும் அவனே!

எந்நாளும் பூமி இயங்க காரணமும் அவன்

கொடுக்கும் பொருளாளலே!


அவனுக்கோர் நாள்

உழவர் திருநாள்

அவனோடு இணைத்து உழைக்க

அறியாவிட்டாலும்

என் வீட்டு வாசலில்

கோலமிட்டு அவன்

கோலத்தையும் அழகு

காண செய்யும்

முயற்சியில் நான்


விரும்பினால் இடுங்கள் கோலத்தை

வாசலில் அடுத்த வருடம், உழவன் 

அவன் விரும்பியது

கிட்ட நம் வாழ்த்தோடு

விடிந்தும் மிளிர்வேன் by Vidhya Nivash

 


விடிந்தும் பிரகாசிக்கும் உன் முகம் ,பல வேலைகளின் ஊடே ,குடும்பத்தின் சுமைகளை சுமந்தும் ,கடைசியில் எதுவென்றாலும் அனைவரின் கைவிரல் திரும்பும், குடும்பத்தின் நம்பிக்கை விளக்கு, மனதில் இருப்பதை மறைத்து பளிச்சென சிரிப்பது போல் தோன்றுது.

இத்தனை ஒளியில் மிளிரும் உனக்கு யாரது ஓநாய் நிலவு என பெயரிட்டது. இருளை தன் வசமாக்கி மிளிரும் அதன் கண்களுடன் ஒப்பிட்டனரோ !இல்லை இரவில் மூலை முடுக்கில் புகுந்து வளம் வருவதாலே!

படமும் கருத்தும் by Veena Shankar



  எவனும் ஒருவனே


 மெய்யில் கையை பற்ற அவன் இருக்கும் போது அவனை நான் கைப்பற்றினேன் உண்மையில்


 தெளிவு பிறந்த மனதில் குடி கொண்டது இறை, கையை பற்றிக் கொண்டு


 கரங்கள் பலமே என்றும்

கொடி நாட்ட


அவசியமுள்ள போது தேற்ற

ஆதரவாய் பற்றிக் கொள்ள

இணைந்து செயலாற்ற

ஈகையோடு உதவி செய்ய

உறுதியோடு இறையை பற்ற

ஊனமில்லாத மனம் கொள்ள

எளிதாய் வாழ்வில் கவின் பெற

ஏளனமாய் இல்லா வாழ்வு பிறக்க

ஐயம் இல்லா மனதோடு சிறக்க

ஒருவனின் ஆட்சி வேண்டுமே

ஓய்வில்லாமல்இறை பணியாற்றிட வேண்டுமே எந்நாளும்

இந்த ஊணும்

Thursday, January 25, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 

கட்டை விரலில் அடங்கும் மனம் இல்லை மனிதம்

ஆணவம் தேவையில்லை ஆளுமை போதும்

நசுக்க நசுக்க தலைவணங்கி பழக்கம் இல்லை

விரல் நுனியில் தொட்டால் போதும் ஆடும் தசைகள்

கைரேகையில் அடக்கிய டிஜிட்டல் உலகின் நிஜம்

ஆணவம் by Veena Shankar

 


கட்டை விரல் உயர்த்தினால் வெற்றியின் சின்னமா?


இல்லை


பிறர் ஆணவத்தை தகர்க்கும் வண்ணமா?


இல்லை


தன் பலத்தை காட்டும் அர்த்தமா?


இல்லை


தன்னை நெருங்க விடாது உணர்த்தும் கோணமா?


இல்லை


விரல் கொண்டு வரம் வேண்டும் முயற்சியா?


இல்லை


அடக்குமுறையால் விளைந்த இறுமாப்பா?


இல்லை


அடங்கிப் போவதால் காணும் விளைவா?

Wednesday, January 24, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


மேலே ஏற கீழே இறங்க இடையில் தாங்கும் படிகள். படிகளுக்கு மட்டுமே தெரியும் ஏறும் போது உள்ள எடை பறக்கும் பூவை போல் எதோ ஒன்றை தேடி ஆர்வத்துடன் இறங்கும் போது உள்ள எடை கனக்கும் கல்லை போல் தேடியதை அடைந்த நிறைவு.ஏறும் போது பாதி எடையை தூக்கி செல்லும் நாம் இறங்கும் போது முழுவதையும் சுமக்கும் படி.படிக்கும் வலிக்கும் என்பது யார் அறிவார்.கீழே வரும் போது தோன்றும் எதுவும் நமதில்லை என்பதே ஏறும் போதும்.அதை அறிந்தால் படிக்கும் வலிக்காது.  

படமும் கருத்தும் by Veena Shankar



வழி நெடுக காணும் பசுமை போல் கொள்ளுமா மனங்கள் வாழும் இல்லத்திலும்


காதல் கோட்டையை அடைய காரணம் தேவையில்லை, காதலர்களின் உண்மையான காதலை தவிர


பசுமையை காக்க பகைமை இல்லா மனம் போதும் இயற்கையை ஏற்க


நீல வானில் அழகான வென்மேகத்தினூடே வளர்ந்து நிற்கும் இதயம் யாருடையது?


அந்த கனவு இல்லத்திற்கும் சொந்தம் யார்?


விடையும் விளங்கவில்லை கலையாத மேகம் போலே

Tuesday, January 23, 2024

ஏணி by Veena Shankar



ஏற்றி விட ஏணி இருந்தாலும்

ஏறும் முயற்சி ஏறுபவரிடம் பிறக்க

 வேண்டும் 


ஏற்றியவரை தூற்றும் குணம் கொள்ளது அவரை

போற்றிட வேண்டும்


 நீல வானில் வெண் மேகத்தின் ஊடே யார் ஏணி இட்டது?


ஓசோனை துளையிட்டது காணாது வானின் நீலத்தை சூறையாட திட்டமா?


கருமேகங்கள் உருவாக விடாமல் மலையை குடைந்து வலம் வர ஆவலா?


இதில் புவி வளம் காணவும் விருப்பமா?


அறியாமையில் செய்கின்ற யாவும் பொய்மையாகி போகும்


ஏணி உண்டு என்கிற பலத்தில் ஏறி விடாதே!

நீ செய்யும் செயலால் ஏணியும் உதிர்த்து கொள்ளும் தனை தானே


 ஏறியவனிமிருந்து ஏமாற்றமடைந்த ஏணி


 கீழிருந்து பார்த்தால் அது ஏணி

மேலிருந்து பார்த்தால் அதுவே சரிவு


 பூமிக்கும் வானுக்கும் ஏணி தேவையில்லை நற்பலன் கொண்டாலே போதும்


 ஏறி விடும் வயதல்ல எனக்கு உடலால்


ஏற்றி விடும் பலமே எனக்கு செயலால்


பறித்து விடும் எண்ணம் இல்லை எனக்கு மனதால்


பக்குவம் கொள்ளும் எண்ணமே எனக்கு காலத்தால்


விலக்கி விடும் நிலை அல்ல எனக்கு குணத்தால்


விலகி நிற்கும் நிழலே எனக்கு எண்ணத்தால்


வளர்ந்து வரும் பருவம் அல்ல எனக்கு முயற்சியால்


தளர்ந்து போகும் நடையே எனக்கு வயோதிகத்தால்


ஏணியின் மனமே அழகு , தான் ஏறாத இடத்திலும்


 ஏணி ஏறுவதற்கு மட்டுமல்ல இறங்குவதற்கும் தான்


ஏறிக் கொண்டே சென்றாலும் அதே ஏணியின் பலத்தில் வெகு நேரம் நிற்க முடியாமல், 

வேறு வழியில்லாமல் இறங்கி வரத் தான் வேண்டும். 


ஏறும் பாதையின் ஏணி இறங்கு முகமாக மாறவும் வாய்ப்புள்ளது.

பார்த்ததில் பிடித்தது by Vidhya Nivash

 


அழகான குடும்பப்பாங்கான படம்.ஒரு நடுத்தர மக்களின் கதை  .ஒரு தாத்தாவின் ஆசை.அவரின் பக்கத்து வீட்டு ஜன்னல் வழி நண்பன்.ஒருவழியாக தாத்தாவின் ஆசை நிறைவேற்ற குடும்பத்துடன் காசிக்கு கிளம்ப .அங்கே வரும் திருப்பம்.ஒரு கட்டத்தில் உணர்ச்சிகரமான நிலையை நகைச்சுவையில் அசத்தல் செய்து முடித்துள்ளனர். அழகான இசையுடன் மகன்,தந்தை,தாத்தா மற்றும் பேரன் உணர்ச்சியை வெளிப்படுத்தும் கதை.

Monday, January 22, 2024

ஊஞ்சல் by Vidhya Nivash


 அழகான மன ஊஞ்சலில் யார் அமர்ந்து ஆடுவது .கொஞ்சம் நில் போகும் வழியில் விழித்துக் கொண்டே தூங்குவோரை கண்டால் சொல்.
கண்ணுக்கு புலப்படாமல் அவள் உண்மையாகவே தூங்குகிறாள் என்று.கனவிலாவது கொஞ்ச நேரம் உறங்கவிடுங்க . 

இப்படிக்கு,

ஊஞ்சல் 

படமும் கருத்தும் by Veena Shankar

 

பற்றும் பொருள் யாதாகிலும் அதன் மேல் நம்பிக்கை வைத்து படருவதே கொடியின் தன்மை.


வளைந்து கொடுத்து வாழ சொல்கிறதோ நம்மை இந்த கொடிகள்


பெருங்காற்றுக்கும் ஈடு கொடுத்து முடிந்த வரை தன் வாழ்வை நிலை நிறுத்தும் கொடிகள் நமக்கு சொல்லும் பாடம்


கை விரல் தவறுதலாய்


பட்டால் கூட ஒடிந்து விடும் உடல் கொண்ட கொடியும் உணர்த்துவது என்ன? 

வளைந்து போனாலும் ஒடிந்து போகாமல் இருக்கவே சொல்கிறது கொடியும் நம்மிடம்

Sunday, January 21, 2024

படமும் கருத்தும் by ஜெய பாஸ்கர்

 


இரண்டு மனமும் ஒட்டியதால் ஒட்டிக்கொண்டதோ இவைகள். ‌‌‌‌‌‌‌‌‌ ‌‌ ‌‌ ‌‌பேசினால் சண்டை வரும் என்பதால் சேர்ந்து விட்டார்களோ தம்பதிகள். ‌ தாகம் என நீர் கேட்ட துணைவிக்கு முதலுதவி தரும் காவலன்😍 ‌‌‌‌‌ ‌‌‌‌‌ ‌ ‌

படமும் கருத்தும் by ஜெய பாஸ்கர்

 


இரவு வந்து விட்டது.கடமையும் வந்து விட்டது.யார் யார் வந்து நுகர்வாரோ.சன்மானம் எவ்வளவு கிடைக்கமோ.பள்ளி செல்லும் மகளுக்கு பணம் கட்டனும் .மங்கையின் எதிர்பார்ப்பு. 🤔

Friday, January 19, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 பார்வதி வேடம் தரிக்கும் இவளே இப்படி என்றால்
நிஜம் எப்படி இருக்கும்
என்ற குழப்பத்தில் 
நடிகனாகிய சிவன்

 ரவிக்கை அணியாத பெண்ணுக்கு சேலை மட்டுமே எடுக்க இவ்வளவு நேரமா? அசந்து போனார் கடவுள், இனி பூமிக்கு வருவதில்லை என்ற நினைப்புடன்

படைத்த கடவுளே என்றாலும் மனைவி துணி எடுக்கும் போதும் விழித்திருக்கும் போதும் அல்லது விவாதம் செய்யும் போதும் பொறுமை காப்பதே நலம்

Thursday, January 18, 2024

இறையும் இறையுணர்வும் by Vidhya Nivash

 


இறையும் இறையுணர்வும் வாழையிலை நிறைய படையல் நெய் சொட்ட .அதில் வேற அவர் அவர் விருப்பத்திற்கேற்ப மாறும் படையல் அடுத்தடுத்த தலைமுறைக்கு..

பலி கொடுத்து வேண்டினால் நினைத்தது கிடைக்கும்.

எந்த கடவுள் நேரில் வந்து இதை கேட்டது.இதை கொடுத்தால் அதை கொடுப்பேன் என்று.எனை மகிழ்விக்க உனை மகிழ்விப்பேன் என்று.

எதை வேண்டி ..கண் முன் நிற்கும் உயிரைவிட கண்ணுக்கு தெரியாத உயிருக்கு எதை கொடுத்து நிறைப்பாய். 

உயிரை படைத்த கடவுளே அந்த உயிரை பலி கேட்குமா?

எதோ அந்தந்த காலத்தில்,பருவத்தில் கிடைத்ததை படைத்து அகமகிழ்ந்த முன்னோர். இன்றும் சிந்திக்காமல் அதையே செய்வதில் என்ன அறம்.

படித்ததில் பிடித்தது,

எண்ணங்கள் மற்றும் தூய மனதால் மட்டுமே இறையையும், இறையுணர்வையும் அடைய முடியும்.

மற்ற அனைத்துமே சிந்திக்க வேண்டியது. 




ஒளியும் ஒலியும் by Veena Shankar

 


ஒளியும் ஒலியும் ஒருசேர

நான் பக்தியில் லயிக்க

கண்மூடி இருந்தாலும்

கண்ணுள்ளே அவர்

ஆட்சி 


மனமுவந்து நின்ற வேளையில்

தன் குரலாலே வாக்கு

சொன்னார் மௌனமாய்

என்னுள்ளே


அவரிடம் இருந்து விடை பெறாமல்

நான் அவரிடம் என்னை

ஒப்படைக்க

த்வணி மாறியது


சங்கடப்பட்ட நான்

கண் திறக்க

தீபாராதனை தட்டு

வெகுதூரம் சென்றிருக்க

ஏமாற்றம் மிஞ்சி மீண்டும் கண் மூடுவதற்குள்


சக்கரைப் பொங்கல்

நெய்யால் என் கை

நினைக்க

மெய்யும் மணப்பதாக உணர்ந்து 

அவருக்கு நான் நன்றி சொல்லும் வேளையில் 


அகக் கண்ணில்

 நான் கண்ட காட்சி

பொய்யல்ல

அவரே என் முன்னே

உணர்ந்தேன் ராஜ கம்பீரமாய்


ஆழ்ந்த பக்தி சொல்லும் என்றும் மெய்ஞானம் அறிவது

அரிது என்று


கோடியில் திளைக்கும் அவரும்

கொடியசைத்து அமர்ந்தார் 

அடுத்த முறை எனக்கு

தரிசனம் தரும் வரை


இறைவன் உறையும் இடத்தில் 

இறையருள் வேண்டுவோரிடத்தில்

தாங்கள் வாழ்வின் 

உயர்வுக்காக வேண்டி நிற்கும் யாசகர்கள்

என் அகத்தின் கண்

Wednesday, January 17, 2024

கானல் காண் by Vidhya Nivash

 


கண் முன்னே ஓடும் கடல் சுற்றிலும் பாறை மலைத்தொடர் .இடையில் சிற்றருவி எங்கிருந்து! கண்ணுக்கு குளிர்ச்சியாக ஜில்லென்ற காற்றில் தண்ணீரின் சாரல் விழ! உண்டான கற்பனையில் முளைத்த மனிதனின் கைவண்ணம் இந்த அருவி.பாலைவனம்,எங்கும் பாறை தான் அதிலும் அருவி அழகு.

" போதும்" - பகுதி இரண்டு by Veena Shankar

 


" போதும்" - பகுதி இரண்டு


பகுதி ஒன்றின் தொடர்ச்சியை காணலாம்



இலவசம் என்று அறிவித்தவுடன் முண்டியடித்துக் கொண்டு, கூட்டத்தில் ஒருவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் "போதும் " என்ற மனப்பான்மை , தானே வருமோ ? 


வருடம் பிறக்கும் முன்பே கிடைக்கும் நாட்காட்டிகளும் டைரியும் வாங்கி குவிப்பதன் நோக்கம் யாது? அந்தந்த வருடம் முடிந்ததும் அது செல்லும் இடம் எங்கே என்று நமக்கு நன்றாக தெரிந்தும் அதற்காக அலைமோதும், திருப்தி இல்லாத மனம், எதற்காக?


யாதும் " போதும்" என்ற ஏற்கும் மனம் வந்துவிட்டால் நம்மை வெல்ல யாரும் இல்லை . ஆனால் இதற்கும் அப்பாற்பட்டு இரு வார்த்தைகள் இருக்கின்றன. அவை அறிவு மற்றும் அனுபவம்.


அறிவைப் பெருக்க நினைக்க வேண்டுமே தவிர அதில் போதும் என மனதிருப்தி அடைய கூடாது. ஒவ்வொரு நாளும் நிமிடமும் ஏன் ஒரு நொடி கூட நம் அறிவை பெருக்க காரணமாக இருக்கும். அந்த நுண்ணறிவு மனிதருக்கு மனிதர் வேறுபட்டாலும் அதன் தேவை இருந்து கொண்டே இருக்கும். தவிர ஒரு கட்டத்தில் கல்வி போதும் என்று படிப்பதை நிறுத்திவிட்டாலும் அனுபவம் என்பது நம் வாழ்வில் பிறக்கும். அறிவை போலவே அனுபவத்தையும் எந்நாளும் நாம் புறம் தள்ளிவிட முடியாது. "எல்லாம் எனக்கு தெரியும், அனுபவப்பட்டிருக்கிறேன்" என்ற மமதை மனிதனின் கண்ணை மறைத்தாலும் சில சமயங்களில் அவன் எதிர் நோக்காத பலவும் நடந்தேறும்.


 அப்படித்தான் நாம் இன்று காணும் இயற்கை சீற்றங்களும். தற்போது அரங்கேறிய மழை வெள்ளத்தின் தாக்கம் நம்மை மட்டுமல்ல வளர்ந்த நாடுகளையும் புரட்டிப் போட்ட வரலாறுகள் உண்டு. இதை அனுபவ பாடமாக எடுத்துக் கொண்டாலும் "போதும்" என்று சொல்லி விலக்கி வைக்க முடியாது. 


" போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்பதை கேட்டு பழகி இருந்தாலும் நாம் அதை உணர்வதில்லை என்பதே உண்மை. 


நமக்கு அவசியத்தின் வரன்முறை தெரியாத வரை இந்த "போதும்" என்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்ற போதிலும் " போதும் " என்பதை சொல்லி பழகி நம் மனதை எளிதில் இலகுவாக்குவோம்.

Tuesday, January 16, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


ஒன்றன் பின் ஒன்றாக நின்று எட்டி பார்க்க நிழலும், நிஜமும் நிழற்படமா! வரைபடமா!

சாலையில் போகும் வாகனம் புழுதி கிளப்ப கண்ணை கசக்கும் மலைகள்.


போதும்!-பகுதி ஒன்று by Veena Shankar

 


போதும் ! - பகுதி ஒன்று


"போதும்! " என்ற வார்த்தை நமக்கு பரிச்சயமானது தான். இருந்தாலும் நாம் உபயோகிக்க தவறுவது ஏன்? என்ற ஐயப்பாடு என்னிடம் உண்டு.  


விருந்தில் பல பதார்த்தங்கள் பரிமாறப்படும் போது நமக்கு வேண்டாதவற்றை முதலிலேயே வேண்டாம் என்ற ஒற்றை வார்த்தையோடு அல்லது நம் கையால் செய்கை செய்தால் நன்றாக இருக்குமே. வயிறு முழுமையாய் நிறைந்த பிறகு வருவது தான் போதும் என்ற வார்த்தை. ஆனால் ஆர்வக் கோளாறினாலும் நம் அவாவினாலும் நாம் போட்டுக் கொள்ளும் அளவுக்கு அதிகமான உணவு, நம்மால் மிச்சம் வைக்கப்படுகிறது. இது அப்படியே குப்பைத் தொட்டிக்கு போவதால் யாருக்கு லாபம்? அப்படி போகும் உணவும் ஒரு சில உயிரனங்களால் உண்ணப்படுவது உண்மை என்றாலும் சில மணநேரத்திற்கு தான் நன்றாக இருக்கும் அந்த உணவும்.


 கடைத்தெருவிற்கு சென்று பழமோ, காய்கறியோ வாங்கும் போது தரும் நெகிழிப் பைகளில் கூட நமக்கு போதும் என்ற மனப்பான்மை வருவதில்லையே, ஏன் ? ஒரு பை வாங்கிக் கொண்டாலும் இரண்டாவது பையை தேடி கண்கள் விரிகின்றன. மேலும் காய்கறி கடையில் கொசுராக தரப்படும் கருவேப்பில்லை, மல்லி செடி கூட அப்படித்தான். கடைக்காரர் கை நிறைய கொடுத்தாலும் போதும் என்ற வார்த்தை வாராது தவிக்கிறதே தவிர போதும் என்ற வார்த்தையை தவிர்ப்பது தான் காரணம் என்பதை நாம் அறிவதில்லை. 


துணி கடைக்கு செல்லும் பொழுது கூட இப்படித்தான். வாங்கிய துணிகளுக்கு ஏற்றார் போல் தான் அங்கே பை கொடுப்பர். இருந்தாலும் கடைக்காரரிடம் மேலும் ஒரு பை கேட்டு வாங்குவதால் பயன் என்ன? "போதும்" என்பது இங்கே காணாமற் போகிறது. இப்படித்தான் பல இடங்களிலும் நடக்கிறது.  


"என்னிடம் இருக்கிறது வேண்டாம், போதும்" என்ற வார்த்தைகள் மறந்து போகிறது. ஒரு பொருளுக்கான ஆசை நம்மிடம் எவ்வளவு புதைந்திருக்கிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.


பகுதி இரண்டில் தொடர்வோம்

Sunday, January 14, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


அந்த பார்வை சொல்லும் மொழி என்ன?


காதலன் காதல் சொல்வான் என்ற எண்ணத்தினாலா?


கணவன் தன் அழகை கண்டு மயங்க விடுக்கும் அழைப்பா?


மனம் அடைந்த ஆனந்தத்தில் அவனுக்கு நன்றி காட்டும் விதமா?


தன் தாய்மையை வெளிபடுத்த வெட்கப்பட்டு நிற்கும் நிலையா?


பருவம் அடைந்த பிள்ளைகள் கொண்டாலும் அழகில் தானும் நிகர் என்று காட்டும் தருணமா?


எந்நாள் காவலன் தன் இணைக்கு முதிர்ச்சியை வெளிப்படுத்தும் வேளையா?


எதுவும் அழகு அவள் கடைக்கண் பார்வையால் மாறா காதலினால்

மயங்க பூமியில் ஆள் உள்ள வரை


 மறைந்திருந்து

ஓர் விழி

ஓருயிரை கவர

அதுவும் தன் 

கடைக்கண் பார்வையை

பதிலாய் கொடுக்க

காதலில் புதைந்தது

நான்கு விழிகள்

ஈர்த்தது இரு மனங்கள்

ஒன்றையொன்று

ஓர் நாள் மாலையில்

இதயங்கள் சங்கமித்த

பின் காத்திருப்பது

எதற்காக?

நினைவில் இருந்து

நீங்கா அந்த

கடைக்கண் பார்வை

நினைவிழக்க செய்தது

அவளை

அவன் தன்

அவளை தழுவ

கடைகண்ணும்

வெட்கம் கொண்டு

மூடிக்கொண்டது 

 தன்னையே

தொட்டா சிணுங்கி

செடி போல


கடைக்கண்ணில்

இவ்வளவு 

சூட்சமமா?

அவள் மயங்க

காதலா? அதில் மூழ்க 

காமமா? அதில் வாகை கொள்ள

Saturday, January 13, 2024

பார்த்ததில் பிடித்தது by Vidhya Nivash

 


பார்த்ததில் பிடித்தது 

திருமணம் ஒன்றே பாதுகாப்பானது பெண்களுக்கு!!

சட்டம் மகளிருக்கு சாதகமானது.ஆனால் சமுதாயம் அப்படி இல்லை.

சில நடமுறைக்கு புறம்பாக இருந்தாலும் பல நிதர்சனமான உண்மை.மகள் தந்தை உறவு,பல பெண்களின் விடையறியா கேள்விகளுக்கு பதில் அழகு.

தான் என்ற அகந்தை அதிகமாக அது தன்னையே அழிக்கும்.எதற்கும் முற்றுப்புள்ளி விடையில்லை .ஒவ்வொரு நிலைக்கும் ஒரு கமா போடுங்க எதுவும் நிலையற்றது என்பதே உண்மை.

ஆம் உன்னை அளக்கும் அளவுகோலும் பார்வைக்கு பார்வை மாறுபடும்.ஒரு முறை மாறினால் கடைசியில் நம் கண்ணுக்கே தெரியாமல் மறைவோம். 

Friday, January 12, 2024

இந்த வார படமும் கருத்தும் by Kiruthika

 


ஏதேதோ ஆசைகள்..

கனவுகள் நிரப்ப ..

இதயம் இணிக்க..

கவிதைகள் பிறக்க...

பூக்கள் கூந்தலேற ...

மருதாணி கைவசமாக...

பட்டுப் புடவை -

மேனியில் பவனிவர..

கெட்டிமேளம் முழங்க...

நாதஸ்வரம் நயமாக்க ..

அட்சதை ஆமோதிக்க ...

பெண்மை அரங்கேற..

மென்மை எதிர்ப்பார்க்க..

நிதர்சனம் - கனவுக்கு 

எதிராக..!..

பொறுமை வசப்பட ..

காலம் வலிமறுக்க ..

காதல் வலிதுறக்க..

அனுபவம் வழிகாட்ட..

ஆன்மீகம் ஆசுவாசப்படுத்த..

எதை அமர்த்தி கொள்ள..

எதை புறம் தள்ளி விட ..

என வாழ்க்கை பாடம் சொல்லி தர..

சங்கடங்கள் வடிய ..

திறமைகள் தங்க...

மின்னும் -

நம் வாழ்க்கை ..

எனும் 

அட்சய பாத்திரம் !!!..

இந்த வார படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


காலை வணக்கம்❤️


அட… இதென்ன என் மனம் நிரம்பி வழிகிறதே! 

துளையிடாதவரை என் பலம், என் நிறை, என் குறை தெரியவில்லை..☺️


என்னில் நிறைந்த ஆற்றல்,

என்னில் நிறைந்த ஆர்வம்,

என்னில் நிறைந்த ஆணவம்,

என்னில் நிறைந்த ஆரவாரம்…


என்னில் நிறைந்த கர்வம்,

என்னில் நிறைந்த கருணை,

என்னில் நிறைந்த கனிவு,

என்னில் நிறைந்த கருத்து…


என்னில் நிறைந்த திறமை,

என்னில் நிறைந்த திகைப்பு,

என்னில் நிறைந்த திமிர்,

என்னில் நிறைந்த திணிப்பு…


அனைத்தும் வழிந்து ஓட,

லேசா.. லேசா..மனம் ஆட,

சுற்றி அனைத்தும் பாட,

வெற்றிடமாக மனம் மாற,


அடடா இதுவே ஆனந்தம்!!!

காலி செய்து காத்திருக்கிறேன்-

காலம் இன்றளிக்கவிருக்கும் பரிசுகளுக்கு🥰

இந்த வார படமும் கருத்தும் by Veena Shankar



 இது சிவன் தலை மேல் விழும் தண்ணீர் போல எப்போதும் விழுந்து கொண்டே இருக்கும். 😃 

வாழ்க்கையில் துவாரங்கள் மிகுதி. அதை அடைக்க பார்ப்பதும் ஒழுக விடுவதும் நம் கையில்


அற்ப பேச்சினால் மிஞ்சுவது கடினமான சுமைகளே! அது துவராமுள்ள பாத்திரத்தில் தங்கும் கடின நீர் போன்றது


நினைவுகள் பல இருந்தாலும் இதயத்தை தைத்த அம்புகளே நிரந்தரம்.

அதனின்று ஆறிய வடுக்கள் வடிந்துவிடும், வடியாதது தைத்த அம்பினால் ஏற்பட்ட ரணம்


நல்லவைகளை தேக்கி, தீய எண்ணங்களை

 விடுக்கும் அல்ல அல்ல வடிக்கும்

 பாத்திரமாக இருக்க வேண்டும்

 என்றும் நம் கதாபாத்திரம்


மேலே தாங்கும் கம்பியின் திறன் அந்த பாத்திரத்தின் துவாரத்தை பொறுத்தே அமையும்


ஓர் வாளியில் இத்தனை ஓட்டைகளா? எப்படி இதில் தண்ணீர் முகர்ந்து, தாகம் தீர்ப்பது என்ற கேள்வி நம்மிடம் எழாமல் இல்லை. 


சரி. ஓட்டையை அடைக்கலாம் என்றால் எந்த உலோகத்தால் வாளி செய்யப்பட்டுள்ளதோ அந்த உலோகத்தை கொண்டு தான் அடைக்க வேண்டும். இது அவசர கதிக்கு உசிதமானதல்ல. மேலும் அதனை அடைத்தாலும் மீண்டும் ஒழுகல் ஏற்படாமல் இருக்கிறதா? என்பதே அடுத்த கேள்வி. 


 இப்படி தான் நாம் வாழும் வாழ்க்கையும் இருக்கிறது. மனிதர்களிடையே நிலவும் போட்டி, பொறாமை, கோபம், ஒழுக்கக்கேடு இன்னபிறவும் ஏன் என்ற கேள்வி உண்டே தவிர, அதனின்று வெளிப்பட்டு நிற்க யாரும் அறிந்திலர். 


 அறிந்தவர் பலர் சொல்லும் பேச்சுக்களை கேட்டு பழகியிருந்தாலும் அதை பின்பற்றுவது சிலரே அதுவும் சில நாட்களே.


முடிந்தவரை வாளியின் கீழ் ஓட்டையை அடைக்க முற்பட்டால் நீரின் இழப்பை சிறிது கட்டுப்படுத்தலாம். மாறாக மேல் ஓட்டையை அடைக்கிறேன் பேர்வழி என்று அதனை அடைக்கும் பட்சத்தில் நீரிழப்பை தடுக்க முடியாது என்பதை நாம் அறிந்திருந்தாலும் நம் வாழ்வில் சரியானதை பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உண்டு என்று சொல்லியே சீர்கேடான வாழ்க்கைக்கு தயாராகி விடுகிறோம் என்பது மட்டுமே உண்மை.


பெரும்பாலும் நம் மனதில் மேலோட்டமாக பதிந்துள்ள புறம் பேசுவது, பிறரை அவமானப்படுத்துவது , கோபம் , பொறாமை போன்ற குணத்தை கைவிட்டாலே மற்ற அனைத்தும் தானாக சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.


வாளியின் ஓட்டை போல் அல்லாமல் நிறை குடமாக வாழ்ந்து காட்டுவோம்.

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


அழுத்தம் தாங்காமல் வெளியேறும் நீர் அளவுக்கு மீறினால் எதையும் அடைக்க முடியாது.குறைய குறைய நிறைய வேண்டுமே தவிர.நிறைந்ததை அடைத்துவிட பிறருக்கும் பயன்படாமல் வெடித்து சிதறும்.

அழகிய வாளி செய்து அதில் ஓட்டை போட்டு ரசிக்கும் உலகம் .

படமும் கருத்தும் by Veena Shankar

 


முகமறிய நட்பில் பூத்த மலர்களின்

இணைந்த கைகள் வாழ்வின் எல்லை வரை தொடரும்


 கைகள் இணைய மனம் போதும்

அதனால் விளையும் பலனும் உண்மையே


வாழ்க்கையின் காலத்தை கடக்க கரங்கள் இணைய வேண்டும்


துணையின் வருடலுக்காக


அண்ணன் தங்கையின் பாசத்திற்காக


பலனை எதிர்பாரா நட்பிற்காக


வயோதிகத்தில் எதிர்பார்க்கும் துணைக்காக 


அயராத உழைப்பின் பலனுக்காக

Thursday, January 11, 2024

காகிதப்பூக்கள் by Vidhya Nivash

 


வேண்டாம் என்றும்,நிபந்தனையாலும்,கசக்கி எறியப்பட்ட காகிதப்பூக்கள் பிடிக்காமலும், வெளியில் சொல்லப்படா வேதனைகளுடன் தன்னை நம்பி வருபவருக்காக இயற்கைக்கு புறம்பாக தினமும் பலமுறை மலர்கிறாள்.பலரின் வெளியில் காட்டமூடியா, அடக்கி வைத்திருந்த மூர்க்கத்தை,ரகசியத்தை தாங்கும் பூக்கள் .

படமும் கருத்தும் by Veena Shankar

  


காகிதப்பூவோ கொண்டையிலே

நிஜப்பூவோ மறைவினிலே


 கெண்டை விழியால் முன் நோக்க

கொண்டை வளைவு

எனை நோக்க

தண்டை வளையும்

யார் நோக்க

சண்டை பிறக்கும்

அவைக்குள்ளே

கொண்டவளை 

ஆள்வது யார் என்று


 வாழ்க்கையில் நடிக்க தெரியாத ஒருவள் நடிகையானாள் இருட்டறையில், தன்னை நம்பி வந்தவனை திருப்திப்படுத்த, 

சொன்னது நூறு கதைகள் அவளை பற்றி

தேவைக்கு நடிக்க தெரிந்த உலகம்


 பகலில் மட்டுமல்ல இரவிலும் ஒளிரும் நிலா

Wednesday, January 10, 2024

வியப்பு by Vidhya Nivash

 


வியக்க வைத்தாய்!

தினமும் ரசிக்க வைத்தாய்!

உயிர் கிடைக்கும் இடம் தேடி,வளைந்து நெளிந்து கம்பி பிடித்து,விரல் நீட்டியது போல்  எட்டி பிடித்து ஏறி விட்டாய்.

நீ உன் ஜீவனுக்காக தலையை எட்டி வெளியே நீட்ட துடிக்கிறாய். 

மற்றொரு உயிரோ தலையை உள்ளே விட்டு எட்டி பார்க்குது உடலை வளர்க்க. 

இரண்டிற்கும் நடுவில் வேடிக்கை பார்க்கும் ஜன்னலும் நானும்..

நீங்கள் எல்லாம் ஐந்தறிவா!


படமும் கருத்தும் by Veena Shankar

 


 நாசிகள் விழித்த போது

உதடுகளும் உறங்கியதே


கண் அயர காத்திருந்து 

மயங்கியதன் விளைவோ?


கூடுவது ஆண் பெண் உறவு மட்டுமல்ல

அவர்களின் மனமும்

எதிர்காலத்தின் எதார்த்தமும் தான்

 வளர்ந்த இரு மழலைகளின் காதல் பரிவர்த்தனைகள்


நேரில் காணும் உண்மை காட்சியா?


ஆண் பெண்ணின் உறவுக்கு சாட்சியா?


நெருங்கி விட்டதாக காட்டும் வாலிபமா?


பாடம் படிக்க வந்த சித்திரமா?


பாடம் எடுக்க உதவும் கலையா?


ஓவியன் உயிர் பெற்ற வடிவமா?


பிரிவில் வலுப் பெற்ற விதமா?


வருந்தாத மனதிலிருந்து பிறந்த வலியா?


கண்டுபிடிப்போம் முடிந்த வரை

Tuesday, January 9, 2024

வீணையும் வீணாவும்

 


அவள் மீட்டிய இசையால் துயில் கொண்டதோ வீணை?


இல்லை இல்லை


அவள் அழகால் மயங்கி சாய்ந்ததோ வீணை? 



கை விரல்கள் ஜாலம் காட்ட


இமைகள் மூடி காலம் கடத்த


விழிகள் அவள் இசையில் லயிக்க


வீணையில் சரிந்த தேகத்துடனே அவள்


ஏதும் விளங்கவில்லை இங்கே நமக்கு


 நாதம் மட்டும் பிறப்பு கொண்டதோ?


அல்லது


காதலும் காமமும் கொள்ள மயங்கியதோ பெண்ணின் மனம்?





மொத்த அழகின் வெளிப்பாடு குமிழ் குமிழாய்





எதைக் கண்டு மயங்கினேன் நான்



அவள் நிலாவை ஒத்த முகத்தை பேசவா?


கார்மேகத்தை நினைவு கொள்ளும் கூந்தலை பேசவா?


மழையின் இடையே வெட்டும் மின்னல் போன்ற நெற்றிச்சூட்டியை பேசவா?


மூன்றாம் பிறையென கொண்ட புருவத்தை ரசிக்கவா?


சிப்பிக்குள் முத்தாய் ஒளிந்திருக்கும் அவள் விழிகளை ரசிக்கவா?


மத்தியில் இருள் போக்கிய திலகத்தை ரசிக்கவா?


மூங்கிலை ஒத்த வடிவமுடைய நாசியை சொல்லவா?


நாணத்தாலும் நாதத்தாலும் சிவந்த

 முகத்தில் செங்குளமென உள்ள உதட்டினை சொல்லவா? 


இலையை மடித்தாற் போல் கொண்ட செவிகளை சொல்லவா?


அது தாங்கும் காய் போன்ற காதணியை பேசவா?


செவியின் பின்னே ஒளிந்திருக்கும் கற்றை மலரை பேசவா?


கவிழ்ந்த தாமரை தண்டின் நிழல் 

நீரில் விழும்போது கொள்ளும் வடிவம்

 ஒத்த கழுத்து மாலையை பற்றி பேசவா?


நேர்த்தியாய் ஆடையை வடித்தவனை பற்றி சிந்திக்கவா?


அதை பாந்தமாய் அணிந்தவளை பற்றியும் சிந்திக்கவா?


மெழுகு என எனை ஏமாற்றிய கரங்களை சிந்திக்கவா?


தறியில் இடப்படும் நூல் போல் உள்ள 

மீட்டும் விரல்களை ரசிக்கவா?


மணாளனை கொள்வது போல் வீணையை ஏந்தும் பாங்கினை ரசிக்கவா?


எது ரசிக்க? 

எதை விடுக்க?


வனப்பே! என் வனப்பு இழந்தேன் உனை கண்டு


விடுப்பு கொள்ளவும் மனம் மறுக்கிறது காட்சியினின்று

பார்த்ததில் படித்ததில் பிடித்தது by Vidhya Nivash



 பார்த்ததில் பிடித்தது

அழகான படம்,இசையோடு இணைந்து காட்சிகள் மட்டுமே பேசியது .இயல்பான நடிப்போடு கதாநாயகி நடந்தாள் இயற்கையோடு. அதில் லயிக்க செய்தாள் .மென்மையாக சொல்லப்பட்ட பல கருத்துகள். 

அதில் முதலில் உன்னை உனக்கு நிரூபி எந்த தடையும் இன்றி.அதன் பின் உலகுக்கு நிரூபிக்க தயாராகலாம். எந்த தடையும் இன்றி மனதில் தோன்றிய படி வெளிபடுத்த பழகு.

படித்ததில் பிடித்த வரி,

இரவல் அறிவு ஒரு போதும் நடைமுறைக்கு பயன்படா.எழுத்தறிவும், சொல்லறிவும் இடத்திற்கு இடம் மாறுபடும்.


Monday, January 8, 2024

கோபுரத்தின் அழகு by Vidhya Nivash

 


கோபுரம் சாய்வதில்லை ஆனால் இங்கு கோபுரம் காணவில்லை யார் சூறையாடியது .பாதியில் யார் இங்கே விட்டு சென்றனர். 

முற்று பெறவில்லை என்றாலும் பலரின் மனதை சூறையாடுது இதன் அழகு.காற்றில் பறக்கும் பறவை சொல்லும் இதன் அழகை ,இதன் நிறம் இன்னும் ஈர்க்க செய்கிறது .வரலாறு பல கதை சொல்லலாம், சொல்லாமல் சொல்லும் சிற்பியின் முற்று பெறா வருத்தம் உண்மையான ரசிகனுக்கு கேட்கும்.

படமும் கருத்தும் by Veena Shankar

 


 உடலில் உள்ள பாரத்தை குறைத்து சிரசில் உலகத்தை தாங்கும் மனிதனால் கிடைக்கும் நம்மை மக்களுக்கு

 தான் வடித்த கலையை தலையில் தூக்கி சுமக்கிறான் இங்கே ஒருவன், தன்னை போல எண்ணமில்லாத நபரிடமிருந்து உலகத்தை காப்பது போல்

அவன் கை வண்ணத்தின் சிறப்போ தலையில்


அவன் வறுமையின் சிறப்போ கோவணத்தில்

 மடைக்கு அழகு வெள்ளம்

நடைக்கு அழகு நளினம்

குடைக்கு அழகு நிழல்

சடைக்கு அழகு பின்னல்

கொடைக்கு அழகு மனிதம்

இடைக்கு அழகு விரதம்

படைக்கு அழகு வீரம்

எடைக்கு அழகு பாரம்

கோடைக்கு அழகு வெயில்

 வடிவத்திற்கு அழகு துயில்


 சுமப்பதும் அவனே

அதை 

அழிப்பவனும் அவனே

காப்பவனும் அவனே

 அதை

கழிப்பவனும் அவனே

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...