வார்த்தையும் மௌனமாய் பிறக்கும் சிரிக்கும் இதயத்திற்கு
தீண்டுவதும் சிறக்கும் எதிர்பாராமல் கிடைக்கும் சுகத்திற்கு
வாழ்க்கையும் வரமாய் ரணத்திலிருந்து மீண்டு வாழ்பவற்கு
செருக்குள்ள நெஞ்சத்தையும் சறுக்க வைக்கும் காதல்
தவிப்புள்ள மனத்தையும் தெளிய செய்யும் காதல்
சினமுள்ள நிலையிலும் சிலையாக மாற்றும் காதல்
குறிப்பறியா நேரத்திலும் திளைக்க வைக்கும் காதல்
பூவாத தாவரத்தையும் தளிர வைக்கும் காதல்
தேடாத இன்பத்தையும் பழக செய்திடும் காதல்
நேரத்தையும் மறந்திட கண்களில் தெறிக்கும் காதல்
தனியே ராகம் கொள்ளும் ஒருதலைக் காதல்
No comments:
Post a Comment