காற்றோடு நான் இயற்கையை ரசிக்க
காற்றுக் குமிழி மட்டுமே
துணையானது இரவிலும் கூட
அதிசயம்!
அலைபேசி அழைக்காத காலம்
இயற்கையோடு இணைந்த ராகம்
விளையாட்டை விடையாக்கும் வசந்தம்
எல்லை எழுதப்படாத வாழ்வு
குறிக்கோலும் குறையாத வெற்றி
அந்நாளில் கொண்ட மகிழ்ச்சி இந்நாளில் மலர தவிப்பதேன்
துள்ளி திரியும் காலத்தில் துயிலத்தான் முடியுமோ?
அள்ளி அணைக்கும் பருவத்தில் அகலத்தான் முடியுமோ?
சொல்லி கேட்ட பாடத்தில் காதல் கொள்ளத்தான் முடியுமோ?
பள்ளி கொண்டாலும் நியாயமான கனவும் காணத் தான் முடியுமோ?
கிள்ளி கொண்டு எனை உணர்ந்தாலும் நிஜமும் நிழலாக்க தான் முடியுமோ?

No comments:
Post a Comment