மேலே ஏற கீழே இறங்க இடையில் தாங்கும் படிகள். படிகளுக்கு மட்டுமே தெரியும் ஏறும் போது உள்ள எடை பறக்கும் பூவை போல் எதோ ஒன்றை தேடி ஆர்வத்துடன் இறங்கும் போது உள்ள எடை கனக்கும் கல்லை போல் தேடியதை அடைந்த நிறைவு.ஏறும் போது பாதி எடையை தூக்கி செல்லும் நாம் இறங்கும் போது முழுவதையும் சுமக்கும் படி.படிக்கும் வலிக்கும் என்பது யார் அறிவார்.கீழே வரும் போது தோன்றும் எதுவும் நமதில்லை என்பதே ஏறும் போதும்.அதை அறிந்தால் படிக்கும் வலிக்காது.

அருமை. உண்மை வித்யா
ReplyDelete