விடிந்தும் பிரகாசிக்கும் உன் முகம் ,பல வேலைகளின் ஊடே ,குடும்பத்தின் சுமைகளை சுமந்தும் ,கடைசியில் எதுவென்றாலும் அனைவரின் கைவிரல் திரும்பும், குடும்பத்தின் நம்பிக்கை விளக்கு, மனதில் இருப்பதை மறைத்து பளிச்சென சிரிப்பது போல் தோன்றுது.
இத்தனை ஒளியில் மிளிரும் உனக்கு யாரது ஓநாய் நிலவு என பெயரிட்டது. இருளை தன் வசமாக்கி மிளிரும் அதன் கண்களுடன் ஒப்பிட்டனரோ !இல்லை இரவில் மூலை முடுக்கில் புகுந்து வளம் வருவதாலே!

நன்று வித்யா
ReplyDelete