ஒளியும் ஒலியும் ஒருசேர
நான் பக்தியில் லயிக்க
கண்மூடி இருந்தாலும்
கண்ணுள்ளே அவர்
ஆட்சி
மனமுவந்து நின்ற வேளையில்
தன் குரலாலே வாக்கு
சொன்னார் மௌனமாய்
என்னுள்ளே
அவரிடம் இருந்து விடை பெறாமல்
நான் அவரிடம் என்னை
ஒப்படைக்க
த்வணி மாறியது
சங்கடப்பட்ட நான்
கண் திறக்க
தீபாராதனை தட்டு
வெகுதூரம் சென்றிருக்க
ஏமாற்றம் மிஞ்சி மீண்டும் கண் மூடுவதற்குள்
சக்கரைப் பொங்கல்
நெய்யால் என் கை
நினைக்க
மெய்யும் மணப்பதாக உணர்ந்து
அவருக்கு நான் நன்றி சொல்லும் வேளையில்
அகக் கண்ணில்
நான் கண்ட காட்சி
பொய்யல்ல
அவரே என் முன்னே
உணர்ந்தேன் ராஜ கம்பீரமாய்
ஆழ்ந்த பக்தி சொல்லும் என்றும் மெய்ஞானம் அறிவது
அரிது என்று
கோடியில் திளைக்கும் அவரும்
கொடியசைத்து அமர்ந்தார்
அடுத்த முறை எனக்கு
தரிசனம் தரும் வரை
இறைவன் உறையும் இடத்தில்
இறையருள் வேண்டுவோரிடத்தில்
தாங்கள் வாழ்வின்
உயர்வுக்காக வேண்டி நிற்கும் யாசகர்கள்
என் அகத்தின் கண்

No comments:
Post a Comment