கலப்பை பிடித்து களத்தில்
இறங்கினால் மட்டுமே
வளம் காண முடியுமே
அவன் தன் வாழ்வில்
உழவு என்பது
உழுவதில் மட்டுமே
முடிவதில்லை
விளைவித்ததை
வினையில்லாமல் விலையாக்கும் வரை
உண்டு என்றும் அவனுக்கு
உழுவ இயந்திரம் கொண்டாலும்
அதை இயக்க தெரிந்தவனும் அவனே!
எந்நாளும் பூமி இயங்க காரணமும் அவன்
கொடுக்கும் பொருளாளலே!
அவனுக்கோர் நாள்
உழவர் திருநாள்
அவனோடு இணைத்து உழைக்க
அறியாவிட்டாலும்
என் வீட்டு வாசலில்
கோலமிட்டு அவன்
கோலத்தையும் அழகு
காண செய்யும்
முயற்சியில் நான்
விரும்பினால் இடுங்கள் கோலத்தை
வாசலில் அடுத்த வருடம், உழவன்
அவன் விரும்பியது
கிட்ட நம் வாழ்த்தோடு

No comments:
Post a Comment