காகிதப்பூவோ கொண்டையிலே
நிஜப்பூவோ மறைவினிலே
கெண்டை விழியால் முன் நோக்க
கொண்டை வளைவு
எனை நோக்க
தண்டை வளையும்
யார் நோக்க
சண்டை பிறக்கும்
அவைக்குள்ளே
கொண்டவளை
ஆள்வது யார் என்று
வாழ்க்கையில் நடிக்க தெரியாத ஒருவள் நடிகையானாள் இருட்டறையில், தன்னை நம்பி வந்தவனை திருப்திப்படுத்த,
சொன்னது நூறு கதைகள் அவளை பற்றி
தேவைக்கு நடிக்க தெரிந்த உலகம்
பகலில் மட்டுமல்ல இரவிலும் ஒளிரும் நிலா

No comments:
Post a Comment