நீயா? நானா?
நம் இருவரில் மஞ்சளில் ஜொலிப்பது யார்- நீயா? நானா?
நம் இருவரில் அம்மா அப்பா செல்லம் யார் - நீயா? நானா?
நம் இருவரில் ஒழுங்காக சாப்பிடுவது யார்- நீயா? நானா?
நம் இருவரில் பள்ளிக்கு அடம் பிடிக்காமல் செல்வது யார்- நீயா? நானா?
நம் இருவரில் மழையை மயக்கி நிற்க வைத்தது யார் - நீயா? நானா?
நம் இருவரில் மழையில் நனையாமல் சளி பிடிக்காம பார்த்துக் கொள்வது யார்- நீயா? நானா?
சொல்லு …நீயே சொல் பப்லு…!
அடுக்கடுக்காக கேள்விக் கணைகளை வைத்தாள் - அம்மாவிடம் திட்டு வாங்கிய கடுப்பில் - மஞ்சள் பூட்ஸ் மீனுக் குட்டி💛💛

No comments:
Post a Comment