உளமாற கடிதம் எழுதி வளர்த்த காதல் இங்கே கசந்து விட்டது
என்னுள் குருதியும் கசிந்து விட்டது
தேடியும் பார்க்காதே
என்னுள் நீயில்லை
என்று உனை நான் நினைக்க தொடங்கினேனோ அன்ற நான் புதைந்து விட்டேன் உன்னுள்
அதை நீ பிரித்தெடுத்த வேளையில் தான் என்
இதயம் நொறுங்கியது
லென்ஸ் வைத்து பார்க்க முடியாவிட்டால் அவள் இதயத்தை உடைக்கும் அளவுக்கு ஏதாவது நல்லது செய்தால்...
கனிந்த இதயம் செந்நிறமானதே
தேடும் விழியை தடுத்து விடு
காய்ந்த இதயத்தை
தாங்கும் சக்தி எனக்கில்லை
அகக் கண் கொண்டு தேடினால் மட்டுமே
வெளிப்படும் பெண்ணின் இதயம்
இந்த பூத்க்கண்ணாடி எம்மாத்திரம்
பூதக் கண்ணாடி இல்லாமலே கசிந்தோடும் குருதியை காண முடிகிறதே, காதலியின் பால் கொண்ட அன்பும் உருகுதே,
ரணம் மட்டுமே நிரந்தரமாய் பெருகுதே,
தேவை ஓர் புகலிடம்
வஞ்சனை இல்லா இதயத்தை தேடி நானும் அவ்வழியே

No comments:
Post a Comment