Wednesday, February 28, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஆசை என்பது நம் கையளவு தான் இருக்க வேண்டும். அதை  அடைந்த பின்பு , நம் கை தானாக  தளர்ந்து போய் விடும் என்பதை  நாம்  அறிவோமானால் கையில் அடைவதும் சிறுத்து போகும். 


இயற்கையான வாயுவும் நீரும் கையில் அடைபடாத போது , அதை தாங்கி நிற்கும் உடலுக்குள் இருக்கும் மனதிற்கு தான் எவ்வளவு ஆசை?


 பிடி தளர்ந்து கை விட்டு  போவது விரல்களால் மட்டுமல்ல , கையில் அடைத்து வைத்திருக்கும் பொருளின் தன்மையாலும்


 நிலவிற்கு பயணம் என்றதும் உவகை கொண்டேன் மனதில்

நம் கொடி நாட்டிய இடத்தில் கால் பதிக்க

அங்கே பல வண்ண கொடிகள் நிரம்பி வழிந்தன

கட்சி கொடிகளாலும்

ஜாதி கொடிகளாலும்

வீட்டு மனைப்பிரிவு  தரகர்களாலும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...