யாரங்கே..?!..
என் முதுகில்..
என்னை கேட்காமலே
அழகு புள்ளி வைத்து விட்டு போனது?!..
என் விழியை -
நீங்கள் மட்டும் தான்
ரசிக்கணுமா?!!..
நான் ரசிக்க
கூடாதா ..?!..
ஒரு முக கண்ணாடி தான்
பரிசாய் -
தந்து விட்டு போங்களேன் ..!..
இந்த புள்ளி மான் -
உங்களையே சுற்றி ..
துள்ளி குதித்து
வந்திடுவேன்..
நம்புங்கள்!..

No comments:
Post a Comment