பறவையும் ஆனது இங்கே களிறு தண்ணிரி்ன் பிம்பத்திலே
இரவின் இருட்டில் குளிரின் மடியில் ஓர்
இளமைக் கூட்டத்தின் ஆட்டம்
அந்தப்புரத்தில் இளவரசியை புறந்தள்ளி நீராடிய
வெண்பறவைகள்
நட்சத்திர விடுதியில் சற்றே தனிமை துறந்து இளைப்பாறும் நாங்கள் யாருக்கும் அடிமையுமல்ல
எவருடைய
அனுமதியின் தேவையுமில்லை
தண்ணீரிலும் காதல் ராகம் பாடும் பறவைகள்
வெண்மையிலிருந்து
செம்மேனிக்கு நிறம் மாறிய பறவைகள்
தத்தளிக்கிறதோ?
தவிக்கிறதோ?
காதல் மொழி பேச!
எத்தனை காலம் வரை
இந்த சாதி பிரச்சனை?
ஒழியட்டும் இன்றோடு என்று
தன் இனத்தின் நிறம் மறந்து
சுதந்திரமாய் வட்டத்தை விட்டு
வெளியேறிய பறவைகளுக்கு புரிந்தது
மானுடனுக்கு எப்போது?
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட
பறவைகள் அல்ல நாங்கள்
உங்கள் உள்ளம் கவர காட்சியானோம்
கருவி கொண்டு படம் பிடித்தாலும்
கருமி அல்ல நாங்கள்
உங்கள் மனம் கிளரவே
எங்கள் வனப்பு
இருளிலும் இழக்காது, மறக்காது உங்கள் விழியில் எங்கள் அழகின் திணிப்பு
யார் பெரியவன்?
என்ற பேச்சில்லை இங்கே
தண்ணீரில் மூழ்கியிருப்பதால்
யார் சிறியவன் ?
என்ற பேச்சில்லை இங்கே
அகவை கணக்கிட தெரியாததால்
யார் தோற்றார்?
என்ற பேச்சில்லை இங்கே
காதலில் லயித்ததால்
யார் வென்றார் ?
என்ற பேச்சில்லை இங்கே
காதலுக்கு ஏதும் இணையில்லாததால்
யார் முன்னே ?
என்ற பேச்சில்லை இங்கே
தண்ணீரில் மட்டுமே வாழ்வதால்
யார் பின்னே?
என்ற பேச்சில்லை இங்கே
அடிமை எண்ணம் மனதில் என்றும் இல்லாததால்
யார் அழகு?
என்ற பேச்சில்லை இங்கே
வனப்பு பகிரப்பட்டதால்
யார் வனப்பில்லை?
என்ற பேச்சில்லை இங்கே
காண்போரின் பார்வை சுகமானதால்
யார் அறிவாளி?
என்ற பேச்சில்லை இங்கே
யாரும் தன்னிலை மறக்காததால்
யார் மூடன்?
என்ற பேச்சில்லை இங்கே
தேவைகள் குறைவு என்பதால்

No comments:
Post a Comment