முகத்தில் கோடுகள் வளைந்து இருந்தாலும்
பார்வை மட்டும் நேரே
என் பாதையிலே
வலமுமல்ல இடமுமல்ல என்
வளைந்த கோடுகள்
வளரவே துடிக்கிறது
என் பௌதீக வளர்ச்சியால் மனிதனின் ஆசையை போல
சுருக்கங்களை கொண்டது அவன் மனது போல
காட்சிகள் பல என் கண் முன்னே இருந்தும்
நானும்
காட்சியாக்கப்பட்டேன் உயிரியல் பூங்காவிலே
என் வண்ணக்கோடுகளை
எண்ண எண்ணி தோற்றுப் போனதால்
நிரந்தரமானது கருப்பு வெள்ளை என்ற இரு
வண்ணக் கோடுகள்
வரியும் வரமாயின
விழியும் வழியாகின
என் தோற்றம் கொண்டு நான் தோற்றுப் போகாமலிருக்க
பரியின் இனமே நானும்
விரைவாக ஓட முடியாவிட்டாலும்
பரியின் இனமே நானும்
கடிவாளம் இல்லாவிட்டாலும்
பரியின் இனமே நானும்
இரு வண்ணக் கலவை கோடுகள் உடலை பிரித்து காட்டினாலும்
பரியின் இனமே நானும்
போர்க்களம் காணா விட்டாலும்
பரியின் இனமே நானும்
சுமையை ஏற்காவிட்டாலும்
பரியின் இனமே நானும்
உங்கள் விழி திறந்து என் விழியையும்
என் உடற் கோடுகளை விலக்கியும் பார்த்தால் விளங்கும் என் எண்ணம்
என்றாவது நானும்
களம் காண்பேன் என்ற உறுதியோடு

No comments:
Post a Comment