Tuesday, February 20, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


பார்த்தவுடன்  கண்களால் தூண்டப்பட்டு நாவால் தீண்டும் வரை பத்திரமாக பிறர் கை தீண்டா இடத்தில் இரு.

இனிப்பை பிள்ளைகளிடம்,உடன் பிறந்தவரிடம் சண்டை போட்டு சாப்பிடுவதே சுகம்.

இதில் வேறு பலவகை அனைத்தையும் பிட்டு சாப்பிட்டு பிடித்ததை கண்டுபிடிக்க ஒரு சோதனை.. நல்ல ரசனை.அதுவும் ஒரு சாதனையே.

அள்ளி கிள்ளி மெள்ள மெல்ல உள்ளே விழுங்க .என்ன ஓர் ஆனந்தம்.

அது முழுக்க தீரும் வரை.கள்வனின் காதலி போல் அப்ப அப்ப அந்த இடத்தையே எட்டி பார்க்கும் மனம்.

மகிழ்ச்சியை விட பதற்றத்தில் உனை கொள்ளும் போது மனம் கொள்ளும் அமைதி.

வலிகளின் நிவாரணி,பிரிவை மறக்க உன் கரம் பிடிப்பேன்.

1 comment:

  1. அருமை வித்யா. முன்னாளில் இதே போல் சுவைத்த நினைவு ஆட்கொண்டது

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...