தூக்கத்தில் கூட விழித்த நிலையின் அடையாளமாக கைகள் அடக்கிய விழிப்புக்கடிகை..
அசதியின் அடையாளமாக தானே மூடும் கண்இமைகள் உட்கார்ந்த நிலையில் தூக்கம் சொர்க்கத்தில் யாரோ பேச...
படுக்கை அள்ளி அணைக்க காத்திருக்க ஏன் நீள் சாய்விருக்கையில் தூக்கம்....
அது ஏனோ தொலைக்காட்சியை போட்ட உடன் வரும் தூக்கம்..
தாய் மடி என்ற தலையணை அணைக்க உடல் தன்னை புத்துணர்வு கொள்ள ,இதயம் காவலராக எட்டு மணிநேர கொடுப்போமே..
தூக்கம் இல்லா விழிகள் சொல்லும் உடல் அவதியை..
தினம் தினம் காதல் கொள்வோம் தூக்கத்தோடு.
தூக்கம் ஒரு வரம். அதுவே மிகுந்தால் பாரம்.அதுவே குறைந்தால் மந்தாரம்

No comments:
Post a Comment