குளிரில் நடுங்கி ,மழையில் குளித்து, வெயிலில் காயும் தேகம் எங்களுடையது.போர்வை வேண்டாம், குடையும் வேண்டாம்.அந்தி சாய்ந்த பொழுதில் இளைப்பாற சிறு மரக்கிளை போதும்.அதை தவிர எந்த சுமைகளும் எங்களுக்கில்லை.
உல்லாசமாக காற்றை குடித்து மேலே பறக்கும் நேரம்,மழை சாரலில் நனைந்த உள்ளம் , மெல்ல குளிர்வாட்ட இதமான சூட்டை தேடுது தேகம்.

No comments:
Post a Comment