Wednesday, February 21, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


என் விழியின் அழகை என் உடலில் பதித்தது யார்?

இயற்கையா?

அல்லது

என்னை கவின் கொள்ள வடித்தவனா?

இல்லை

வரைந்தவனா?


அழகுக்கு அழகு சேர்க்கும் வடிவத்திற்கு

கற்பனையும் வேண்டுமோ?

கண்டவுடன் காதல் கொள்ள பல மனங்கள் இருக்கும் போது 

சிந்தனையில் சுருக்கம் கொள்வதும் ஏன்? 

உருவம் பொருட்டல்ல அழகில் நாம் மயங்குவதே உண்மை

[19/02, 09:28] Veena Shankar: இவன் காண்போரின் விழிக்கு வினாவா?

இல்லை விடையா?


எப்படி இந்த கொள்ள அழகு என்பது வினா


கண்ட பின் ரசிப்பதே சாத்தியம் என்பதே விடை


விளையாட்டு பொருளா இது?


அலங்காரப் பொருளா இது?


கண்டதும் ஏந்தி கொள்ளவா இது?


கண் மறைத்தாலும் மனதில் நிற்கவா இது?


அழும் குழந்தைக்கு விளையாட்டு காட்டவா இது?


துள்ளி குதித்து ஆரவாரப்படுத்தவா இது?


இவற்றுள் ஏதுமில்லை அது


நித்தம் நான் பயன்படுத்தும் சாவி கொத்தின் அங்கம் அது.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...