Tuesday, February 27, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



உனை கண்டதும் அழகில் நான் மயங்கினேன் 

நீ வளரும் வரை காத்திருக்க

என்னால் முடியாது

வா! உனை அப்படியே

சாப்பிடுகிறேன் என்றதோ அழகு குட்டி?


ஒரே நிலையில் உள்ளதால் வந்த துள்ளலா?


ஒரே நிறம் என்பதால் வந்த ஆச்சரியமா?


ஒரே புன்னகை கொண்டதால் ஆனந்தமா?


ஒரே பார்வை அமைந்ததால் பிரமிப்பா?


ஆர்வம் காட்டுவதால் அடைக்களமா?


அழகை கண்டு மயக்கமா?


யார் அழகு இருவரில்?


பித்து கொள்கிறது மனம்


மூர்ச்சை கொள்ள செய்கிறது படம்


தெளிவு பிறக்கிறது தினம்


அறிவு வளர அதுவே தனம்


செயற்கை ஆடை குழந்தையின் குளிருக்கு இதமாய் 


இயற்கை இறக்கை பறவைக் குஞ்சுக்கு பதமாய்


இருந்தாலும் காட்சி நமக்கு 


தரமாய்


 வரமாய்


நிறமாய் 


சுகமாய்


அமைவதும் அரிதாய்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...