நீங்கள் இன்னும் ..
ஏனோ கூண்டுக்குள் ..?..
கூட்டுக்குள்..?..
உங்களின் -
பாதுகாப்பிற்கா ?..
இல்லை ..
உங்கள் -
உடமைகளின்
பாதுகாப்பிற்கா ?..
எங்களுக்கு
தெரியாது !..
இதோ
எங்களை
பாருங்கள்..!..
சுதந்திரமாய்..
சந்தோஷமாய்...
வானம்பாடி ..
பறவைகள் கூட்டம் ..
நாங்கள்...!!..
சேர்க்கவும்
ஏதுமில்லை..
தொலைக்கவும்
ஏதுமில்லை..!..
ஆதலால்
தொல்லையும்
ஏதுமில்லை..!..
உங்களை போல்
உதடு விரித்து
புன்னகைக்க
தெரியாது !..
ஆனால்
எங்களை
பார்த்ததும்..
உங்களை
புன்னகைக்க
வைக்க முடியுதே !!!..
இது
போதும்..
எமக்கு !..
இது
போதுமே ...
வேறென்ன
வேண்டும்..
நீ போதுமே ..!!...
-இப்படிக்கு
காதல் அன்னம்

No comments:
Post a Comment