Thursday, February 29, 2024

கவிதைக்கு கவிதை by Veena Shankar

 


கவிதைக்கு கவிதை


கவிகளுக்கு உரிமையானாய்


படிப்பவர்களுக்கு கனியானாய்


எதுகையும் மோனையுமாய் 


விளங்காத விசயங்களுக்கு விவரமானாய் 


காதலர்களுக்கு தூது போனாய்


மன வேதனைக்கு ஓர் மருந்தானாய்


பிரிந்தவருக்கு ஏக்கத்தில் துணையானாய் 


போட்டிக்கும் பங்களிப்பு நீ ஆனாய்


திடீரென்று உதயமாவாய்


தனி படத்திற்கும் விவரமானாய்


கவிஞரின் எழுத்தால் சில நேரம் பொய்யானாய்


மெய்க்கு இங்கே புறம்பானாய்


செவிக்கு விருந்தானாய்


புதுமையை ஏற்றாய்


வரும் காலம் பொற்காலம் தான் புதுமையை கொள்வதால்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...