கவிதைக்கு கவிதை
கவிகளுக்கு உரிமையானாய்
படிப்பவர்களுக்கு கனியானாய்
எதுகையும் மோனையுமாய்
விளங்காத விசயங்களுக்கு விவரமானாய்
காதலர்களுக்கு தூது போனாய்
மன வேதனைக்கு ஓர் மருந்தானாய்
பிரிந்தவருக்கு ஏக்கத்தில் துணையானாய்
போட்டிக்கும் பங்களிப்பு நீ ஆனாய்
திடீரென்று உதயமாவாய்
தனி படத்திற்கும் விவரமானாய்
கவிஞரின் எழுத்தால் சில நேரம் பொய்யானாய்
மெய்க்கு இங்கே புறம்பானாய்
செவிக்கு விருந்தானாய்
புதுமையை ஏற்றாய்
வரும் காலம் பொற்காலம் தான் புதுமையை கொள்வதால்

No comments:
Post a Comment