தாரகையின் உடல் என்ன மந்திரமா?
பல வண்ணங்களில் மிளிர்ந்து நம்மை வாட்ட தந்திரமா?
அடிமைப் பெண்ணுக்கு கிடைத்த சுதந்திரமா?
அவள் அழகை காண தூக்கமும் வந்தி(டு)ருமா?
அவள் மேல் மையல் கொண்ட பின் மாயமும் தந்திடுமா?
வாராக் கடன் போல ஏய்ப்பு செய்வதால் மனம் வருந்திடுமா?
அவள் நடையும் நடனமும் கண்டவரை கொளுத்திடுமா?
அவள் மேனியை கண்டதும் உடலும் கொழுத்திடுமா?
நேர்பார்வையால் நம்மை சிலிர்க்க வைத்திடுமா?
அவள் வண்ணமும் வாலிபமும் நம்மை கவர்ந்துடுமா?
வாழ்க்கை வட்டத்தில் வளைந்து , நெளிந்து, தெளிந்து வாழ அது கவின் பெறும்
ஓவியமும் நடனமும் கற்றவர் கலையில்
அவள் அணிந்துள்ளது வண்ணமிகு ஆடையா?
அல்லது
நாகரீக உலகின் பெரும் சவாலா?
அல்லது
அணிந்தது போல் காட்சி கொடுக்கும் மாயமா?
காண விழையும் மக்கள் யாருமில்லை

No comments:
Post a Comment