இரும்பு இதயத்தை கட்டிப் போட
இரும்பு வேலி தேவையில்லை
கடந்து வந்த பாதையின் கனத்தை அறிந்த இதயத்திற்கு
உதிரம் சிந்தினாலும்
இதயம் பூட்டினாலும்
சிகரம் தொட உண்டான
சுவடுகள் உண்டு
இந்த இருவரின் இழப்பால் கொண்ட தியாகத்தால்
உன் ஓட்டம் நின்றால்
ஆட்டம் கொள்ளும் வாழ்க்கை
அதனாலே உன்னை
இரும்புக் கரம் கொண்டு அடைத்தேன்
உன்னிலிருந்து என்னை விடுவிக்காமல் இருக்க
உதிரம் சிந்தியபடி செல்லும் இதயம் அடைக்கப்பட்டது ஓர்
பெட்டிக்குள்ளே
அடுத்தவரிடம் தஞ்சம் கொள்வதற்காக
ஆனால் என் காதல் மட்டும் விலங்கிடப்பட்டது என்னவள் உயிர் பிரிந்ததால்
தேடுவோர் பலர் இருப்பினும்
அடைபடுவது ஒருவரிடத்திலே
உதிரம் தாங்கிய இதயம் சொல்லும் ஒரு கோடி கதைகள்
வாழ்க்கையில்
முற்றுப் பெறாமல் தோற்றது எவ்வாறு என்று.

No comments:
Post a Comment