பாதத்தில் தெரியும் வளைவுகள் யாவும்
பாதையின் இன்னல்கள்
பாரதத்தின் சுவடுகள்
பயந்து போகாமல்
காத்ததில் பெருமை
பகைமை உணர்வை வளர்ப்பதை விட
புரிந்து பயனடைவதே சரி
பல அடிகள் மாறி மாறி காலை முன் வைப்பினும் அழுத்தம் கொடுப்பது முன்னங்கால் விரல்களுக்கே
பிளவுபட்ட விரல்களின் ஒற்றுமையை பரைசாற்றுவதும் சிறப்பே
பயணம் நடையென்றாலும் தொட்டது சிகரத்தை
நம்மால் முடியாதது எது?

No comments:
Post a Comment