பல வண்ணக் கலவை
மட்டுமல்ல இது
நம் எண்ணமும் உணர்ச்சியும்
அதன் விளைவும்
கொண்ட கலவை
கவலை மறக்க, மறைக்க தூரிகையும்
தூதாகும் வித்தகர் அல்லாதவர்களுக்கு
பறக்கும் தன்மை இருந்தாலும் கையிலுள்ள
நூலை விட்டு பிரிந்தால் மட்டுமே
வெற்றி பெறும்
இப்பயணம் சுதந்திரமாய்
உணர்ச்சி என்பது இல்லாமற் போனால்
ஜடப்பொருளே!
அடுத்தவருக்கும் பாரமாய்
தாங்கும் நிலமும் வெடிக்கும் நிலை உண்டு
மண்ணில் ஈரம் உள்ளவரை

No comments:
Post a Comment