இருக்கப்படும் பூமியும்
இறைக்கப்படும் நீரும்
வரையறுக்கப்பட்ட சூரியனும்
வரன்முறையற்ற காற்றும்
இழுக்கப்படும் வாயுவும்
இழக்கப்படும் வாயுவும்
படைத்தவனும்
புடைக்க அனுபவிப்பவனும்
ஒன்றே என்றாலும் உன்னில் இத்தனை வகைகளா?
செடிகள், கொடிகள், மரங்கள் என எத்தனை பரிணாமங்கள் உன்னில்
உணவாகும் மருந்தாகும் நீ கண்ணுக்கு விருந்தாவதும் உண்டு பல நிற பூக்களாலும் மாறுபட்ட நிறத்தை உடைய இலைகளாலும்
வியக்கிறேன் உன்னை கண்டு
வியர்க்கிறேன் உன் வளமை கண்டு
குளிர்கிறேன் உன் பசுமை கண்டு
கூனுகிறேன் உன் அருமை கண்டு

No comments:
Post a Comment