ஐந்து கிரகங்களின் அணி வகுப்பு
என்று கேள்விப்பட்டேன்..சிறிது
தாமதமாக பார்த்தேன் இரண்டு
கிரகங்கள் மறைந்துவிட்டன.
எத்தனை அதிசயங்கள் வானில்
நித்தம் நித்தம் பார்த்தாலும் மயக்கும்
அழகு நிலவும் ,வானும் அள்ள அள்ள
குறையா புதையல்.கையில் ஐந்து
விரல்கள் ஒன்றாக இருந்தாலும்
ஒன்றில் ஒன்று மாறுபட்டாலும் ஒன்று
குறைதாலும் மற்றது செயலற்றது
.இன்று கேட்டதில் பிடித்தது தானே
உயர்ந்தவன் என்ற எண்ணம் அடி
முட்டாள் தனம் ஒவ்வொருவரும்
தனித்தன்மை வாய்ந்தவர்.
இந்த கிரகங்களை போல தான்
சின்ன, பெரிய,அருகில் ,தொலைவில்
எங்கு இருந்தாலும் எதுவும் நிரந்தரம்
இல்லை.ஒரு நாள் மாறும்.நாம் பிறரை
எவ்விதம் நினைக்கிறோமோ அதுவே
நமக்கும். இதில் யாரும் உயர்த்தி
தாழ்த்தி இல்லை.

No comments:
Post a Comment