கரும்பலகை
பள்ளிக் காலங்களில் இடைவேளை நேரத்தில்
எழுத்தின் கண்ணாடி பிம்ப வடிவத்தை எழுதிய
நினைவுகளோடு நான் வடிவமைத்த
தற்போதைய நினைவு நீங்கா கரும்பலகை
எந்த மொழியில் எழுதினாலும்,
அதை ஏற்கும் மனத்தாய் நீ
எழுதி எழுதி அழித்தாலும்,
அதை விரும்பும் மாயவள் நீ,
எனவே என் பள்ளிக் காலங்களில்,
இப்படி எழுதியதை நினைவு கொண்டு,
உன்னை மறவாத பழைய,
மாணவி நான்

No comments:
Post a Comment