கடந்த வாரம் ,ஏன் இந்த வாரம் கூட தொடர்கிறது மகளிர் தின கொண்டாட்டங்கள் ஆனால் இன்று படித்த செய்தி வருத்தத்தையும் சிந்திக்கவும் தூண்டுகிறது.
ஒரு மாவட்டத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேல் மாணவர்கள் 12 வது வகுப்பு தேர்வுக்கு செல்லவில்லை.ஏன்? இரு காரணங்கள் பேசப்படுகிறது ஒன்று குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடர முடியவில்லை.இரண்டாவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை இளமையில் திருமணம் பெண் பிள்ளைகளுக்கு மீண்டும் அதிகரிக்கின்றனவாம் .
என்ன நடக்கிறது..எங்கிருக்கிறோம் நாம்..இன்னும் சுதந்திரம் வேண்டும், வாழ்க்கை துணையே தேவையில்லை என்று ஒரு புறமும்.
இன்னும் எத்தனை பாரதியும்,பெரியாரும் தேவை.தெருவிற்கு ஒரு தன்னார்வ குழுக்கள் பிள்ளைகளின் படிப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் பெருக, ஆசிரியரும் பெரும் பங்காற்ற..ஏன் இந்த நிலை ??

No comments:
Post a Comment