என்ன இல்லை என்னிடம்
இருள் நீக்க ஒளி வேண்டுமா?
தாகம் அடங்க நீர் வேண்டுமா?
மாசு நீங்கிய காற்று வேண்டுமா?
குளிர் காய சூரியன் வேண்டுமா?
ஊர் சேர பாதை வேண்டுமா?
அழகை ரசிக்க வானம் வேண்டுமா?
மனம் இளைப்பாற மணற்பரப்பு வேண்டுமா?
கவலை மறக்க குயில் இசை வேண்டுமா?
காதலின் புகழ் பாட இவை அனைத்தும் வேண்டுமா?
நீ வேண்டுவது அனைத்தும் என்னிடம் இருக்கும் போது நீயோ வீட்டுக்குள்ளே முடங்கி விட்டு
இயற்கையான என்னை குறை சொல்கிறாய்.

No comments:
Post a Comment