மஞ்சள் வானில் நீ சிரிக்க உன்
அழகில் பார்ப்போர் கண்கள் கூச
நன்னீர் எங்கும் தகதகக்க..
இன்றைய அதிசயம்
கீழே கார்மேகம் மேலே தெளிந்த நீலவானம்
இடையே டார்ச் லைட் அடிப்பது போல் வானத்தை
கிழித்துக் கொண்டு வரும் பகலவனின்
ஒளிக்கதிர்கள்..
வானத்திற்கு கூலிங் கிளாஸ் போட்ட மாதிரி
ஒரு காட்சி அப்படியே கண்களில் படமெடுக்க
மனதில் பதிந்த ஓவியம்..
எத்தனை எத்தனை அழகு நித்தம் ரசித்தாலும்
அடங்க உருமாறும் அதிசயமோ வானமும்
பகலவனும்..

அழகு
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete