உண்மை ( மெய் )
மெருகூட்டிய மெழுகு பொம்மை தான் உன் மெய்
சிலையாகி நின்று செல்லரிக்க செய்யுதோ உன் சிரிப்பு
பலகைகளை பற்றியிணைப்பதோ உன் கரங்கள்
முற்றத்தில் நின்றே வருவோரை கவரும் உன் விழி ஒரு வழி பாதையே
குழந்தைகளை குதூகளிக்க வைக்கும் உன் பார்வை
நிழலா நிஜமா என்று நினைக்க வைக்கும் உன் வனப்பு
காலை முதல் இரவு வரை கடையில் உன் தரிசனம்
உயிரில்லாமல் போனாலும் உனக்கான இடம் உயர்ந்ததே
மாறிவிடவா நானும் உன்னைப்போல் உயிரில்லை என்பதால் கண்ணீரும் இல்லை உன்னிடம் பொம்மையே

No comments:
Post a Comment