அநீதி
படித்த கேள்வி தேர்வில் வாராமல் இருப்பதும்
நமக்கு பிடித்த உணவை உண்ணும் வேளையில் பிறர் யாசிப்பதும்
காவலாளியாக இருந்து மதிய வேளையில் சற்றே கண்ணயரும்போது பிடிபடுவதும்
அவசரமாக பணம் எடுக்க வங்கி செல்லும் போது அடுத்தவருக்கு படிவம் நிரப்புவதும்
நம் அழகு கண்ணாடியில் ஒழுங்கீனமாக தெரிவதும்
நிலாச்சோறு ஊட்டும் போது ஒருநாளும் நிலா பிடிபடாமல் போக்கு காட்டுவதும்
அடுத்த பெண்ணின் சேலை மட்டும் அழகாய் தெரிவதும்
அழகு நிலையத்திற்கு சென்று வீடு திரும்பியதும் நம்மை வித்தியாசமாக அடுத்தவர் பார்ப்பதும்
பார்த்த, படித்த, பிடித்த விசயங்கள் நம்மை எதிரியாக நினைப்பதும்
அநீதியே! நீதி தெரிந்தவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment