Friday, March 24, 2023

அநீதி by Veena Shankar



 அநீதி


படித்த கேள்வி தேர்வில் வாராமல் இருப்பதும்


நமக்கு பிடித்த உணவை உண்ணும் வேளையில் பிறர் யாசிப்பதும்


காவலாளியாக இருந்து மதிய வேளையில் சற்றே கண்ணயரும்போது பிடிபடுவதும்


அவசரமாக பணம் எடுக்க வங்கி செல்லும் போது அடுத்தவருக்கு படிவம் நிரப்புவதும்


நம் அழகு கண்ணாடியில் ஒழுங்கீனமாக தெரிவதும்


நிலாச்சோறு ஊட்டும் போது ஒருநாளும் நிலா பிடிபடாமல் போக்கு காட்டுவதும்


அடுத்த பெண்ணின் சேலை மட்டும் அழகாய் தெரிவதும்


அழகு நிலையத்திற்கு சென்று வீடு திரும்பியதும் நம்மை வித்தியாசமாக அடுத்தவர் பார்ப்பதும்


 பார்த்த, படித்த, பிடித்த விசயங்கள் நம்மை எதிரியாக நினைப்பதும்


அநீதியே! நீதி தெரிந்தவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...